தேநீர் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6703
“சாதம் முழுவதும் குளிர்ந்து போய்விட்டது. அம்மா.'' கதவிற்கு அருகில் வந்து நின்றுகொண்டு மகள் மெதுவான குரலில் சொன்னாள். அதைக் கேட்டதும் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்த அப்பா சொன்னார். “இந்த பிடிவாதத்தை விட்டுட்டு, நீங்கள் கதவை மூடிவிட்டு படுக்குறீங்களா? இல்லையென்றால்....?''
அப்பா நாற்காலியை விட்டு எழுந்து, அவிழ்ந்து போன வேட்டியைச் சரி செய்து அணிந்தார். “கூறுவதைக் கேட்பதுதான் உங்களுக்கு நல்லது. இல்லாவிட்டால்... இந்த மழையில் நான் இறங்கி நடப்பேன். பட்டினியுடன் நான் இந்த குளிரில் வெளியே படுத்திருப்பது உங்களுக்கு விருப்பமான விஷயம்தானே? தெருவில் படுத்துக்கொண்டு நாயைப்போல சாவதைப் பார்க்க வேண்டுமென்பதுதானே உங்களுடைய ஆசை?''
கதவு முரட்டுத்தனமான சத்தத்துடன் மூடப்பட்டது. விளக்கு அணைக்கப்பட்டது. இருட்டில் மழையையும் காற்றையும் அனுபவித்துக்கொண்டு அந்த நாற்காலியில் சாய்ந்து படுத்துக்கொண்டு அப்பா தன் மீசையைத் தடவியவாறு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். சுருட்டு தீர்ந்து போய்விட்டிருந்தது. நாற்காலியைச் சுற்றி சிதறிக் கிடந்த துண்டுகளிலிருந்து ஒன்றை குனிந்து எடுத்து, சிரமப்பட்டு பற்ற வைத்து, அப்பா புகைத்தார்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,