Lekha Books

A+ A A-

இயேசுவும் கண்ணாடியும் - Page 4

Yesuvum Kannaadiyum

 “வேண்டாம்...” - இயேசு சொன்னார்: “மது பிறகு... இப்போ குளிர்ச்சியான நீர் கொடு....” தண்ணீர் எடுக்கப்போகும் வழியில் மரியம் சொன்னாள்: “நீ இங்கே வருவேன்னு என் உள்மனசுல தோணுச்சு. அதனாலதான் நான் உனக்காக வாசல்ல காத்திருந்தேன். நீ வந்தப்போ மூவந்தி நட்சத்திரம் வானத்துல தெரிஞ்சது. நீ நட்சத்திரம் உதிப்பதைப் பார்த்திருக்கியா?” இயேசு அதற்கு ஒன்றும் பதில் பேசவில்லை. அவள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். இயேசு அதை வாங்கி பாதி குடித்தார். மீதியை கையில் கொட்டி முகத்தையும் கண்களையும் கழுவினார். மரியம் மீண்டும் வராந்தாவில் வந்து உட்கார்ந்தாள். இயேசு அவளின் மடியில் தலையை வைத்தவாறு வராந்தாவில் படுத்தார்.

“மார்த்தாவும் லாஸரஸும் எங்கே?” - இயேசு கேட்டார். “சந்தைக்குப் போயிருக்காங்க. இப்போ வந்திடுவாங்க” - இயேசுவின் நெற்றியில் கை வைத்தவாறு மரியம் சொன்னாள். இயேசு கேட்டார்: “மரியம்... நீ கண்ணாடி பார்த்திருக்கியா?” “இல்ல...” - மரியம் சொன்னாள்: “கண்ணாடி ரோமன் பணக்காரர்கள் கிட்டதான் இருக்கு. நீ அதைப் பார்த்திருக்கியா என்ன?” இயேசு சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. சிறு இடைவெளிக்குப் பிறகு மரியத்தின் முகத்தைப் பார்த்தவாறு சொன்னார்: “இல்ல...” “அதை மட்டும் நீ பார்த்திருந்தா, நீ ஒரு அழகான இளைஞன்றதை நீ தெரிஞ்சிருப்பே!” - குனிந்து இயேசுவின் வறண்டுபோன உதடுகளில் முத்தத்தைப் பதித்த மரியம் சொன்னாள். இயேசு அதற்கு பதிலொன்றும் சொல்லவில்லை. அவர் தலையைத் திருப்பி ஆகாயத்தைப் பார்த்தார். வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்து கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. திடீரென்று மரியம் தலையைத் தாழ்த்தி இயேசுவின் முகத்தையே உற்று நோக்கினாள். அவள் ஆச்சரியத்துடன் இயேசுவின் கண்களையும், கன்னத்தையும் தொட்டவாறு கேட்டாள்: “என்ன பேசாம இருக்குறே? அழறியா என்ன?” மரியம் தன் முகத்தை இயேசுவின் முகத்தோடு ஒட்டி வைத்துக்கொண்டு சொன்னாள் : “இயேசு.... உனக்கு என்ன ஆச்சு?” இயேசு மரியத்தின் கழுத்தைச் சுற்றிலும் தன் இரு கைகளையும் கோர்த்தார். அவரின் கன்னங்கள் மீண்டும் நனைந்தன. இயேசு சொன்னார்: “மரியம்… எனக்கு பயமா இருக்கு!” மரியம் இயேசுவின் இருட்டில் தெரிந்த முகத்தை கவலையுடன் பார்த்தாள். பிறகு... தன் ஒரு கையை அவரின் உதடுகளில் வைத்தவாறு மெதுவான குரலில் அவள் சொன்னாள் : “ஷ் சாயங்கால நேரத்துல தேவையில்லாதது எல்லாம் பேசாதே. தெய்வ கோபம் உண்டாகப் போகுது.” இயேசு இலேசாக அழுதவாறு தலையைத் திருப்பி, தன்னோட நனைந்த முகத்தை மரியத்தின் சூடுள்ள மடியில் அமர்த்தினார்.

(புனுவலுக்கு நன்றி. புனுவலின் ‘மில்க்கி வே’ என்ற படத்தில் இயேசு முகத்தைச் சவரம் செய்யலாமா வேண்டாமா என்று சிந்திக்கிற காட்சி இருக்கிறது என்று சமீபத்தில் என்னுடைய நண்பர் சுரேஷ் பாட்டாலி சொன்னதைக் கேட்டு, நான் எழுதிய கதை இது.)

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel