Lekha Books

A+ A A-

வாழ்க்கை - Page 3

Vazhkkai

அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே சொன்னாள்: “என் விதி இப்படி ஆயிடுச்சு. போன வருடம் என் அம்மாவும் இறந்துட்டாங்க. இனி எனக்குன்னு இந்த உலகத்துல இருக்குறது இந்தச் சின்னப் பையனும் என் தம்பியும் மட்டும்தான்.” நாராயணியின் மகன் குமாரன் டாக்டர் பாலகிருஷ்ணன் கழற்றி வைத்திருந்த செருப்பைத் தன் கால்களில் அணிந்து கொண்டு உரக்கச் சிரித்தவாறு வாசல் முழுவதும் நடந்து கொண்டிருந்தான். நாராயணி சொன்னாள்: “டேய், உனக்கு இவரைத் தெரியலையா?மல்லாக்கப் படுத்திருந்த காலத்துல உனக்கு ரூபாய் தந்த மனிதர்.”

அந்த ஞாபகம் அவளுடைய கண்களில் நீரை வரவழைத்தது. அந்த அளவிற்குச் சந்தோஷம் நிறைந்ததாக இருந்தது அவளுடைய தாம்பத்திய வாழ்க்கை.

“உன் கணவன் ராமன் ஒரு நல்ல மனிதன்” - பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறுகிற வகையில் சொன்னான்.

அதை கேட்டு அவள் தான் அணிந்திருந்த மேற்துண்டால் கண்ணீரைத் துடைத்தாள். “அப்போ என் வயித்துல மாதவி இருந்தாள்.”

“அவள் எங்கே-”

“அவள் ரொம்பவும் வெட்கப்படக் கூடியவ... உள்ளே ஒளிஞ்சிருக்கா...”

“உன் தம்பி எங்கே?”

“அவன் பெரிய போக்கிரியா ஆயிட்டான். எங்கேயாவது தகராறு பண்ணவோ, சண்டை போடவோ போயிருப்பான்.”

டாக்டர், குமாரனின் கையில் இரண்டு ரூபாய் கொடுத்தான். அவன் ஒரு பைத்தியத்தைப் போல அந்த நாணயங்களைத் தன் வாய்க்குள் போட்டு, சிரித்துக்கொண்டே மண்ணில் படுத்து உருண்டான்.

சுமார் பதினேழு வயது மதிக்கக்கூடிய ஒரு அழகு தேவதை இடுப்பில் ஒரு குடம் நீருடன், வெட்கத்தில் முகத்தைக் குனிந்து கொண்டு வாசல் வழியாகச் சமையலறைக்குள் சென்றாள்.

“பாலகிருஷ்ணன், நாராயணியிடம் கேட்டான்: “அது யாரு?”

“தெரியலையா? அம்மு... என் தங்கச்சி...”

“அம்முவா?”

என்ன மாறுதல்! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நாராயணியின் இடுப்பில் பார்த்த அந்த அழுக்குப் பிடித்த குழந்தை!

இந்த அளவிற்குப் பேரழகு படைத்த ஒரு இளம்பெண்ணை அவன் வேறு ஒரு இடத்திலும் பார்த்ததில்லை.

மறுநாள் ஆற்றின் அருகில் டாக்டர் பாலகிருஷ்ணன் அம்முவைத் தனியாகப் பார்த்தான். அவர்கள் ஒருவரோடொருவர் சிறிது நேரம் பேசினார்கள். இறுதியில் அம்மு சொன்னாள்: “நான் போறேன். அக்கா பார்த்தா...”

“உன் அக்காவைப் போகச் சொல்லு. இன்னைக்கு இரவு நல்ல நிலா வெளிச்சம் இருக்கும். நீ வருவியா?”

“எதுக்கு?”

பாலகிருஷ்ணன் எதுவும் சொல்லாமல் சிரித்தான். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்ததை நாராயணி தூரத்தில் நின்றுகொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அம்முவைக் கோபமாகத் திட்டினாள்: “என்னடி... ஆம்பளைங்ககூட கொஞ்சுறதுக்கும் குலாவுறதுக்கும் போறியா? உன்னை... அடிச்சு காலை ஒடிச்சாத் தான் சரியா இருக்கும்... பாத்துக்கோ...”

அம்மு அழுதாள். நாராயணி என்றால் அவளுக்கு மிகவும் பயம்.

அம்முவை நாராயணி திட்டியதை டாக்டர் மறைந்து நின்று கொண்டு கேட்டான். அவன் சிரித்துக்கொண்டே தன் மனதிற்குள் நினைத்தான். ‘பாவம்!’ பழைய ராணியின் ஏமாற்றமும் பொறாமையும்!

அன்று இரவு, அந்த நிலவு வெளிச்சத்தில், அந்த நதிக்கரையிலிருந்த மணல்மேட்டில் அவன் அம்முவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவள் எப்படியாவது வராமல் இருக்கமாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

இறுதியில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு அம்மு வேறொரு வழியாக அவனுக்குப் பின்னால் வந்து நின்றாள். “எதுக்காக என்னை வரச் சொன்னீங்க?” - அவள் பதைபதைப்புடன் கேட்டாள். அவளுடைய முகம் வெளிறிப் போயிருந்தது. மொத்தத்தில் அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவன் அவளுடைய கையைப் பிடித்தான். இன்னொரு கையால் அவளுடைய முகத்தை உயர்த்தி முத்தம் கொடுக்க முயன்றான்.

அவள் அவனுடைய கையைத் தட்டிவிட்டு விலகி நின்றாள்: “ஏய்.... வேண்டாம். நான் போறேன்.” அவள் பதைபதைப்பு மேலோங்க நான்குப் பக்கங்களிலும் பார்த்தாள்.

பாலகிருஷ்ணன் மேலும் அவளுக்கு அருகில் வந்தான்.

அவள் திரும்பி அங்கிருந்து ஓடி மறைந்தாள்.

ஏமாற்றத்துடன் அவன் அந்த இடத்திலேயே மேலும் சில நிமிடங்கள் காத்திருந்தான். அவள் திரும்பி வரவேயில்லை.

மறுநாள் காலையிலேயே நகரத்திற்கு அவன் கட்டாயம் போயாக வேண்டும்.

அடுத்த வருடம் மீண்டும் டாக்டர் பாலகிருஷ்ணன் குன்னத்து வீட்டிற்கு வந்தான்.

ஓணக் காலம் அது. மலைமேல் இருந்துகொண்டு சிறார்கள் பூ அழைப்பும் பாட்டுமாக இருந்தார்கள்.

ஆனால், புதிய நிலத்தில் எந்தவொரு கொண்டாட்டமும் இல்லை. அங்கு மகிழ்ச்சியின் எந்த வெளிப்பாடும் இல்லை. பாலகிருஷ்ணனை அங்கு வரவேற்றது நாராயணியின் அழுகைச் சத்தம்தான்.

அம்முவும் குமாரனும் அடுத்தடுத்த நாளில் இந்த உலகத்தை விட்டுப் போய் ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. பக்கத்து கிராமங்களில் பரவிக்கொண்டிருந்த ஒரு விஷக் காய்ச்சலே அவர்களின் மரணத்திற்குக் காரணம்.

வருடங்கள் அதற்குப் பிறகும் கடந்தோடின. டாக்டர் பாலகிருஷ்ணனுக்கத் திருமணமாகியது.

புதிய நிலத்தில் ஒரு தாயும் மகளும், அவர்களை எந்த நேரத்திலும் வந்து தொந்தரவு செய்து, தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த ஊர் சுற்றியான ஒரு இளைஞனும் துக்கம், வறுமை ஆகியவற்றுக்கு மத்தியில் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

4

சில நாட்கள் குன்னத்து வீட்டில் தன் மனைவியுடன் தங்குவதற்காக டாக்டர் பாலகிருஷ்ணன் அங்கு வந்திருந்தான்.

புதிய நிலத்தில் ஒரு ஆரவாரம், நாராயணி தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு உரத்த குரலில் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள். கோபாலன் மாதவியை ஒரு தென்னை மரத்தில் கட்டிப்போட்டிருந்தான். காளைக்குச் சூடு வைக்கக்கூடிய சூலாயுதத்தைப் போல இருந்த ஒரு இரும்புத் துண்டை சூடு பண்ணி கையில் பிடித்துக் கொண்டு ஒரு அரக்கத்தனமான சிரிப்புடன் அவன் அவளை நெருங்கிக் கொண்டிருந்தான். “அய்யோ... மாமா... என்னை.... என்னைக் கொன்னுடாதீங்க” என்று அவள் துடித்தவாறு உரத்த குரலில் கூப்பாடு போட்டாள். கோபாலன் அவளுடைய உள்ளங்கையில் அந்த இரும்புக் கம்பியை அழுத்தினான்.

“அய்யோ!” என்றொரு அலறல் சத்தம். அவள் தன் சுய உணர்வை இழந்தாள். அவளுடைய கழுத்து சாய்ந்தது. முகம் குனிந்து விழுந்தது.

பின்னாலிருந்து யாரோ கோபாலனின் கழுத்தைப் பிடித்தார்கள். அவனால் திரும்ப முடியவில்லையென்றாலும், எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தன்னைப் பிடித்த அந்த கையை அவன் தன் கையிலிருந்த இரும்புத் துண்டால் சுட்டான்.

ஒரு அதிர்ச்சியுடன் அந்தப் பிடி விலகியது. கோபாலன் திரும்பிப் பார்த்தபோது, அங்கு டாக்டர் பாலகிருஷ்ணன் நின்றிருந்தான்.

தாங்க முடியாத வேதனையுடன் பாலகிருஷ்ணன் அங்கு உட்கார்ந்தான். உடனே நாராயணி ஓடி வந்து தீக்காயம் பட்ட அவனுடைய கையில் கொஞ்சம் அடைக்காயின் சாற்றைப் பிழிந்து விட்டாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel