
"வேறு சில இடங்கள் இதைவிட அழகாக இருக்கின்றன.'' அவர் அவளை வாரி எடுத்து இருட்டில் மறைந்தார்.
ஹோட்டல் ரிலைஸிற்கு முன்னால் இருந்து கொண்டு ந்கோவாகு திரும்பவும் கூறினார்:
"மிஸ் பேக்கரின் பெயரில் ஒரு அறை செகரட்ரி கூறி "புக்" பண்ணப்பட்டிருக்கிறது. ரிசப்ஷனுக்குச் சென்று சாவியை வாங்கி அறையில் காத்திரு. பதினைந்து நிமிடங்களுக்குள் நான் நீ இருக்கும் இடத்திற்கு வருகிறேன்.''
அறையில் வெளிச்சம் அணைந்தபோது பலமான ஒரு கை தன்னைச் சுற்றி வளைத்து விட்டிருப்பதை மேரி தெரேசா உணர்ந்தாள்.
அவருடைய கையிலிருந்த உரோமங்கள் அவளுடைய கை உரோமங்களுடன் சேர்ந்தன. அவளுக்கு அப்போது மூச்சு அடைப்பதைப்போல இருந்தது. அவர் எப்போதும் அப்படித்தான். அவளைக் கொஞ்ச வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளுக்குள் மூழ்கிவிடுவதற்கு அவர் விரும்பினார். வேதனை உண்டானாலும், அவளால் உரத்த குரலில் அழ முடியவில்லை.
"நான் உன்னை வேதனைப்படுத்தி விட்டேனா?''
"இல்லை... அதற்கு நேர் மாறாக...''
அவளுடைய நகங்கள் அவருடைய சதைக்குள் ஆழமாக இறங்கின. அவருடைய திறந்த வாய் தன்னுடைய முகத்திற்கு நேராக நெருங்கிக் கொண்டிருப்பதை அவள் தெரிந்து கொண்டாள். மேலும் கீழும் மூச்சு விடுவதைத் தவிர, அவளால் எதுவும் கூற முடியவில்லை. வேறு எதையும் செய்வதற்கும் முடியவில்லை. அவர் அதற்கு எப்போதும் நீண்ட நேரம் எடுப்பார். இளைஞர்களைவிட நீண்ட நேரம். அவள் அதை விரும்பினாள். தான் நாசமாகி விட்டோம் என்ற விஷயம் அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அதனால் என்ன? அவள் துடித்தாள்... ஜொலித்தாள்... பிறகு, சுதந்திரமானவளாக ஆனாள்.
இறுதியில் எப்போதோ தூக்கத்தின் ஆழங்களுக்குள் விழுவதற்கு முன்னால், அந்த இரவு வேளையில் அவள் நான்கு முறை சிணுங்கவும் அழவும் செய்தாள்.
"ஓ... இது எந்த அளவிற்கு சுகமாக இருக்கு! என்னை இப்படி சந்தோஷப்படுத்துவதற்கு நீங்கள் எந்த அளவிற்கு கருணை மனம் கொண்டவராக இருக்கிறீர்கள்!''
ஒரு பெரிய அமெரிக்கன் காரில் ந்கோவாகு வந்து தன்னை அழைத்துக் கொண்டு செல்வதை அவள் கனவு கண்டாள். கறுப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்த அவள் சந்தோஷத்தில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள். தன்னுடைய மனைவி இறந்துபோய் விட்டாள் என்று அவர் அவளிடம் கூறினார். அவளை அழைத்துக் கொண்டு செல்வதற்காக அவர் பிணத்தின் இறுதிச் சடங்குகள் நிகழ்ச்சியிலிருந்து நேராக வந்திருக்கிறார். அவளால் அதை நம்ப முடியவில்லை. அவள் சில பழைய ஆடைகளையும் உடுப்புகளையும் எடுக்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால், தன்னால் சிறிதுகூட நேரத்தை வீணாக்க முடியாது என்று ந்கோவாகு கூறினார். அவளை காரில் ஏற்றிக்கொண்டு ந்கோவாகு விமான நிலையத்திற்கு வேகமாகச் சென்றார். வழியில் ஏராளமான அறிமுகமான முகங்களை அவள் பார்த்தாள். ஒரு கிழவனை குழந்தைகளிடமிருந்து பிரித்து எடுத்தாள். மிசஸ் ந்கோவாகுவைக் கொன்றுவிட்டாள் என்று தன்மீது குற்றத்தைச் சுமத்தும் பேச்சை, காருக்கு வேகம் இருந்தாலும், அவள் தெளிவாகக் கேட்டாள். விமான நிலையத்தை அடைந்தபோது, மேரி தெரேசா வியர்வையில் குளித்து விட்டிருந்தாள். இடமில்லாமலிருந்ததால், அவர்கள் காக்பிட்டில் இருக்க வேண்டியதிருந்தது. ந்கோவாகு கட்டுப்பாட்டைத் தன் கையில் கொண்டு வந்து, இயந்திரத்தை ஸ்டார்ட் செய்தார். ரன்வேயின் வழியாக ஓடினாலும், அதனால் தரையிலிருந்து பத்து அடிகளுக்கு மேலே உயர்வதற்கு முடியவில்லை. தன்னைப்பின் தொடர்ந்து வருவதைப்போல தோன்றிய அந்த கறுப்பு நிற நாய் விமானத்திற்குள் தாவி ஏறுவதை மேரி தெரேசா பார்த்தாள்.
கனவு காட்சிகளில் இருந்து அதிர்ச்சியடைந்து சுய உணர்விற்கு வந்தபோது, மேரி தெரேசா ஆடை அணிந்து நின்று கொண்டிருக்கும் ந்கோவாகுவைப் பார்த்தாள்.
"நான் இப்போது போக வேண்டும்.''
அவருக்கு அருகில் அவள் வந்தாள்.
படுக்கையின் அருகில் அமர்ந்து அவளுக்கு முத்தம் தந்துவிட்டு அவர் திரும்பவும் கூறினார்:
"நான் போக வேண்டும்.''
"ஆனால்... நான்... நான் உங்களிடம் சில விஷயங்களைக் கூற வேண்டும்.''
"இங்கு என்னைப் பிடித்து நிறுத்தி வைப்பதற்காக நீ ஒவ்வொரு வழிகளையும் பார்க்கிறாய்.''
"இல்லை... இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.''
அவள் அவருடைய கையைப் பிடித்து போர்வைக்கு கீழே தன்னுடைய அடிவயிற்றில் வைத்தாள்.
"உங்களுடைய குழந்தை என் வயிற்றில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.''
"என்ன? நீ தமாஷாகக் கூறுகிறாய்.''
"இல்லை... இது உண்மை.''
"ஓஹோ... இது என்னுடைய குழந்தைதான் என்பதற்கு என்ன ஆதாரம் உன்னிடம் இருக்கு?''
அவள் வயிற்றைப் பார்த்தாள். தலையணையை அழுத்திக் கடித்தாள். பிறகும்... பிறகும்... அழ ஆரம்பித்தாள். முஷ்டியைச் சுருட்டி படுக்கையை அடிக்கவும் கால்களால் உதைக்கவும் செய்தாள்.
"என்ன ஆச்சு தங்கமே?''
"போ... அயோக்கியா... வெளியே போ... வெளியே போ... அயோக்கியா... போ... வெளியே போ...''
சூரியன் வானத்தின் விளிம்பில் தலையை நீட்டியது. ஒரு வெப்பமான நாளை அளிப்பதற்காக தொடர்ந்து வானத்தை நோக்கி மெதுவாக ஏறியது. சாளரத்தின் வழியாக வந்து சேர்ந்த அதிகாலைப் பொழுது வெளிச்சம் ந்கோவாகுவின் மனைவியை எழுப்பிவிட்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கண் விழிக்கக்கூடிய வழக்கமான செயலைப் போல அவள் வானொலியை நோக்கி நடந்து சென்றாள். தேசிய செய்தியை கவனித்தாள்.
"நேற்று இடதுசாரி மகளிர் அமைப்பின் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய தலைவர் ந்கோவாகு மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு சொற்பொழிவை ஆற்றினார். ஆண்களுக்கு நிகரான, சிறிதும் பலவீனராக இல்லாத, நம்முடைய பெண்களை விடுதலை பெறச் செய்ய வேண்டியதன் தேவையைப் பற்றி தன்னுடைய சொற்பொழிவில் அவர் அழுத்தமாகக் கூறினார்!"
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook