Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 15

munnera uthavum 365ponmozhigal

141

காயம் பட்டவர்களுக்கு

மட்டுமே எப்போதும் கெட்ட நேரம்

வந்து சேரும் என்று கூறுவதற்கில்லை.

***

142

எல்லா பொருட்களும்

மண்ணிலிருந்துதான் பிறக்கின்றன.

அனைத்துப் பொருட்களையும்

திரும்பவும் மண்ணே

எடுத்துக் கொள்கிறது.

***

143

கடவுளே கூட

இரண்டு மலைகளை

அவற்றிற்கு நடுவில்

ஒரு பள்ளம் இல்லாமல்

உருவாக்க முடியாது.

***

144

எங்கு இசை இருக்கிறதோ,

அங்கு தவறான

செயல்கள் நடைபெறாது.

***

145

அதிகமான வயது அல்ல –

கூர்மையான பார்வைதான்

அறிவைக் கொண்டு வரும்.

***

146

பிறரிடம் பார்க்கும்

நல்ல விஷயங்களை

நீ விரும்ப ஆரம்பித்தால்,

அவற்றை உன்னிடம்

நீ உண்டாக்கிக் கொள்வாய்.

***

147

உன்னிடம் சில கவிதைத்

தன்மைகளை உண்டாக்காமல்,

உன்னால் எந்த இடத்திலும்

கவிதையைப் பார்க்க முடியாது.

***

148

மிகப் பெரிய மரம்

பலமான காற்றை

தன்னை நோக்கி

வரச் செய்கிறது.

***

149

மனிதர்களிடம் நம்பிக்கை வை.

அவர்கள் உனக்கு

உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.

அவர்களை உயர்வாக நடத்து.

அவர்கள் உயர்வானவர்களாக

நடந்து கொள்வார்கள்.

***

150

இடைவெளி அன்பை கூர்மைப்படுத்துகிறது.

இருத்தல் அதிக உறுதியனாதாக ஆக்குகிறது.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel