
ஒரு பெண் ஒரு முறை, ஒரு ஆணுக்கு காமவிஷயத்தில் கீழ்ப்படிந்துவிட்டால், அவள் நிரந்தரமாக அவனுக்கு அடிமையாகி விட்டாள் என்றுதான் அர்த்தம். ஏதோ ஒரு எழுதப்படாத சட்டத்தை அவன் எடுத்துப் பயன்படுத்துவான். மிகச் சில நாட்களிலேயே நான் கிட்டத்தட்ட அந்தக் கிழவனின் வைப்பாட்டி என்ற நிலைக்கு ஆளாகிவிட்டேன்.
ஒரு நன்றியுணர்வு மட்டும் எனக்கு இருந்தது. அப்பாவுக்கு சிறிதும் தடை இல்லாமல் சாப்பாடு கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதே அது...
அதற்குப் பிறகும் ஆறு மாதங்கள் கடந்தோடின. தந்தைக்கு மன நலம் பாதிக்கப்பட்டது. நாடி நரம்புகள் செயல்படாமல் போயின. சரீரம் ஒரு பழைய துணியைப் போல ஆனது. ஆனால், வயிறு மட்டும் ஒரு நெருப்பு மலையைப்போல எரிந்துகொண்டேயிருந்தது. அதே நிலையில் ஒரு மாதம் நரக வேதனையை அனுபவித்த பிறகு, அப்பா இந்த உலகத்தின் சிரமங்களிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல், மிகவும் அமைதியாக விடை பெற்றுப் பிரிந்து சென்றுவிட்டார்.
அப்போதுதான் என்னுடைய தனிமைச் சூழலின் பயங்கரத்தன்மையை நான் முழுமையாக உணர்ந்தேன். இன்னொரு உண்மையும் என்னுடைய இதயத்தை சுட்டெரித்துக் கொண்டிருந்தது- நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதே அது.
அப்பா இறப்பதற்கு முன்பே வீட்டை, கடன் தந்த ஆள் தன்வசம் எடுத்துக் கொண்டார். தந்தை மிகவும் இயலாத நிலையில் இருந்த காரணத்தால், அவரை அங்கிருந்து வெளியேற்றக்கூடிய மன வருத்தம் இருந்ததால், கடன் கொடுத்தவர் இதுவரை அதற்காகக் காத்திருந்தார். அப்பா இறந்தவுடன், வீட்டைக் காலி செய்து தந்துவிடவேண்டும் என்று உரிமையாளர் கேட்டுக் கொண்டார்.
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற உண்மையை ஆட்கள் தெரிந்து கொள்வதைவிட எனக்கு அவமானகரமான விஷயமாகத் தோன்றியது- அதற்குக் காரணகர்த்தா அந்த மேனேஜர்தான் என்பதைத் தெரிந்து கொள்வது. அவரும் வெளிப்படையாக அதை மறுப்பார் என்று எனக்குத் தெரியும். அதனால் நாங்கள் அந்த விஷயத்தை சமாதானமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தோம். அவர் எனக்கு கொஞ்சம் பணம் தந்தார். நான் பள்ளிக்கூடத்திலிருந்து விலகி, இன்னொரு ஊருக்குச் சென்று ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து வசிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய கர்ப்பம் முழுமையான சமயத்தில் கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. இறுதியில் பிரசவத்திற்கு மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தேன்.
எனக்குத் தேவைப்படாமல் பிறந்த அந்தக் குழந்தை பிரசவத்திலேயே இறந்துவிட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டிய அந்த நாள் வந்தது. இரவு வேளையில் எங்கே இருப்பது என்பதைப் பற்றி எந்தவொரு நிச்சயமும் இல்லாத ஒரு பெண்ணாக நான் இருந்தேன். அவளுடைய எரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களை வேறு யாராலும் மனதில் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. எந்தவொரு இலக்கும் இல்லாமல் நான் மருத்துவமனையைவிட்டு வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடந்தபோது யாரோ பின்னாலிருந்து என்னை அழைத்ததைப் போல எனக்குத் தோன்றியது. நான் திரும்பிப் பார்த்தேன். ஒரு இளைஞன் தன்னுடன் வரும்படி என்னைப் பார்த்து சைகை செய்தான்.
அவனை மருத்துவமனையில் இருந்தபோது ஓரிருமுறை பார்த்திருக்கிறேன் என்பது மட்டுமே பழக்கம் என்றிருந்தாலும், மூழ்கி சாக இருக்கும்போது, சிறிய வைக்கோல் கூட பெரியதுதான் என்ற உண்மையுடன், நான் அவனைப் பின்பற்றிச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தேன்.
நாங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தை அடைந்தவுடன், அவன் என்னிடம் கேட்டான்: ‘நீ எங்கே போகிறாய்?'
என்னுடைய நிலையை முழுமையாக உணர்ந்து கொண்டிருந்ததைப் போல இருந்தது அந்தக் கேள்வி. நான் பதில் எதுவும் கூறாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.
‘என்னுடன் வந்தால் நான் ஒரு பனியன் கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறேன். சம்மதமா?' நான் சந்தோஷத்துடனும் நன்றியுடனும் சம்மதித் தேன்.
அந்த மனிதனுடன் சேர்ந்து நான் இந்த நகரத்திற்கு வந்தேன். அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னைக் காப்பாற்றுவதற்காக வந்த ஒரு கடவுளின் தூதுவனைப் போலவே அவன் நடந்துகொண்டான்.
‘ஜானு... நீ பிரசவமாகி அதிக நாட்கள் ஆகவில்லையே! உன்னுடைய உடல் நலம் சரியாகும்வரை, ஒரு பதினைந்து நாட்கள் நீ ஓய்வு எடுக்கணும்.'
அவன் எனக்கு அன்புடன் அறிவுரை கூறினான். தொடர்ந்து அன்று இரவு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கு சற்று வயதான ஒரு பெண் இருந்தாள். அவளிடம் என் நண்பன், ‘கல்யாணியம்மா, இவள் இங்கே பதினைந்து நாட்கள் தங்கி இருக்கட்டும். நீங்கள் இவளுக்குத் தேவைப்படுபவற்றைக் கொடுத்து, கவனமாகப் பார்த்துக்கொள்ளணும். இந்த அறையை விட்டு வெளியே எங்கேயும் விடக்கூடாது' என்றான்.
இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வருவதாகக் கூறிவிட்டு அவன் போய்விட்டான்.
கல்யாணியம்மா எனக்கு பளபளப்பான ஆடை களைத் தந்தாள். நல்ல உணவு, உடல் தேறக்கூடிய மருந்து ஆகியவற்றை அன்புடன் கொடுத்து அவள் என்னை மகளைப்போல கவனித்துக்கொண்டாள்.
ஆனால், பதினைந்து நாட்கள் தாண்டிய பிறகும் நான் உயர்வாக நினைத்த இளைஞன் திரும்பிவரவில்லை. பதினாறாவது நாள் கல்யாணியம்மா என்னிடம் சொன்னாள். ‘பதினைந்து நாட்களுக்கான செலவு 35 ரூபாய். ஆடைகளுக்கு 12 ரூபாய். மொத்தம் 47 ரூபாய். பணம் எங்கே?'
‘அவர் வரட்டும்...' நான் முகத்தை குனிந்துகொண்டு பதில் கூறினேன்.
‘எந்த அவர்?' கல்யாணியம்மா மிடுக்கான குரலில் சொன்னாள்: ‘அவன் இனிமேல் வரமாட்டான்...'
அந்த அம்மா என்னிடம் அனைத்து உண்மைகளையும் மனம்திறந்து கூறினாள். அது ஒரு பெரிய விபச்சாரிகள் விடுதி என்பதையும், கல்யாணியம்மாதான் அதன் தலைவி என்பதையும், என்னுடைய செலவிற்கு தேவைப்படும் பணத்தை நானேதான் உழைத்து சம்பாதித்துக் கொடுக்க வேண்டுமென்பதையும் நான் தெரிந்துகொண்டேன். எந்தவொரு வருத்தமும் இல்லாமல் நான் எல்லாவற்றையும் காதில் வாங்கிக்கொண்டேன்.
‘பிறந்துவிட்டேன் அல்லவா? இனி எப்படியாவது வாழ வேண்டியதுதான்...' என்று நான் முடிவு எடுத்துக் கொண்டேன்.
விலைமகளாக இருப்பதற்கான ஆரம்பப் பாடங்களை கல்யாணியம்மா எனக்கு கற்றுத் தந்தாள்.
ஒரு விலைமகளாக வாழ்க்கையை நடத்துவதற்கு முதலில் எந்தவொரு பெண்ணும் விரும்பமாட்டாள். தன்னுடைய பெண்மைத்தன்மையிடம் இறுதியாக விடைபெற்றுக்கொண்ட பிறகுதான் அந்த கேவல மான வேலையைச் செய்வதற்கு ஒரு பெண் சம்மதிக் கவே செய்வாள். விலைமகளின் புன்னகைக்கும் வெளித் தோற்றத்திற்கும் பின்னாலிருக்கும் அந்த வாழ்க்கை யைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook