Lekha Books

A+ A A-

காதல் - Page 4

rasikkathane azhagu-kadhal

அதே நிகழ்ச்சியில் காதலில் தோல்வி கண்ட ஓர் இளைஞர் கூறிய சோகமான விஷயம் என் மனதை தாக்கியது. அந்த இளைஞர் 'நான் ஒரு பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தேன். அவளும் என்னை அவ்விதம் காதலிப்பதாக கூறினாள். என்னிடம் உருகி உருகி பேசினாள். ஐந்து வருடங்கள் தொடர்ந்து நாங்கள் காதலித்து வந்தோம். அவளது படிப்பு முடிந்த பின் அமெரிக்காவில், அபரிதமாக சம்பாதிக்கும் ஒருவனை அவளது வீட்டார் அவளுக்காக திருமணம் முடிக்க பேசியபோது, மனம் மாறி விட்டாள்.

ஐந்து வருடங்களாக காதலித்த அவள் வெறும் ஐந்து நிமிடங்களில் அமெரிக்க மாப்பிள்ளையை மணமுடிக்க அவளது பெற்றோரிடம் முழு மனதுடன் சம்மதித்துவிட்டாள். அதிர்ச்சி அடைந்த நான், 'உன்னால் என்னை மறக்க முடியுமா?' என்று கேட்டேன். அதற்கு அவள் கூறிய பதில்... என் இதயத்தை நொறுக்கியது. அவள் கூறிய பதில், 'மறந்துதானே ஆக வேண்டும்' என்பதாகும். 'அப்படி என்றால் நம் காதல்?' என்று கேட்டேன். 'அது ஒரு (passing cloud)' என்று கூறி மேலும் என்னை அதிர வைத்தாள்.

அவளது திருமண பத்திரிக்கையை எனக்கு அவள் கொடுத்த அன்று இரவு நான் தற்கொலை முயற்சி செய்தேன். என் பெற்றோர் என்னைக் காப்பாற்றி விட்டனர். அதன் பின் உணவு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல் நான் ஏறத்தாழ இருபது கிலோ எடை குறைந்தேன். என்னால் அவளை மறக்க முடியவில்லை. அவளை மறக்க முயற்சித்தாலும் அவள் மீதான காதலை என்னால் மறக்கவே முடியவில்லை. காதல் என்பது தீவிரவாதம் போன்றது' என்று பேசி முடித்தார் அந்த இளைஞர். அவரது தோற்றம் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர் போலத்தான் இருந்தது.

காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்றோரை விட்டு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சி செய்த அவரது தற்கொலை நடவடிக்கை முட்டாள்தனமானது.

காதலிக்கும் பொழுது தங்கள் காதல்தான் பெரிது என்று எண்ணி சொந்த பந்தங்களைத் துறந்த காதலர்கள், தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணமான பின்னர் பெற்றோர் உட்பட உறவுகளை இழந்து தவிக்கும் பொழுது 'இப்படி அனைவரையும் இழக்க வைத்த காதல் தேவை இல்லையோ..... தவறு இழைத்து விட்டோமோ' என்று முன்னுக்குப்பின் முரணாக நினைப்பார்கள். காலதாமதமாக ஏற்படும் இந்தக் குற்ற உணர்வுகளால் என்ன பலன்?

சில சமயங்களில் காதல் என்பது கானல் நீர் போல ஆகிவிடும். இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க, ஒரு விழிப்புணர்வு தேவை. எச்சரிக்கை உணர்வும் தேவை. ஒருவன் மீது ஈர்ப்பு கொண்டு விட்டால் அவனைப்பற்றிய உண்மையான சில தீய குணங்கள் பற்றி பிறர் கூறினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், ஆராய்ந்து பார்க்காமல், தொடர்ந்து அந்தக் காதலை வளர்த்துக் கொள்ளும் பெண்களுக்கு காதல், கானல் நீர் ஆகிவிடுகின்றது.

 ஒரு இளம்பெண் இப்படித்தான்... அவளது நலன் மீது அக்கறை கொண்ட பலர் எச்சரித்தும் அவள் காதலித்தவனின் சுயரூபம் பற்றி அறிந்து கொள்வதில் அலட்சியமாக இருந்து விட்டு பின்னாளில் அவனைப் பற்றிய உண்மைகள் தெரிந்துக் கொண்ட பின், தன் தவறை உணர்ந்தாள். 'ஏன் இப்படி பலர் எச்சரித்தும் உஷாராக இல்லாமல் உதாசீனாப்படுத்தி விட்டாய்?' என்று கேட்டால் 'லவ் இஸ் ப்ளைண்ட்' (Love is Blind) என்கிறாள். இப்படி குருட்டுத்தனமான காதலை வளர்ப்பவர்கள் நிலைமை மிக மோசமானது.

நல்லவனா... கெட்டவனா... என்று ஆராய்ந்து பார்த்து வருவது காதல் இல்லை என்று முட்டாள்தனமாக வாதாடினாள். நல்லவனா... கெட்டவனா... என்று பார்த்து வரவேண்டாம். குறைந்த பட்சம், காதலிக்க ஆரம்பித்த பிறகு மற்றவர்கள் எச்சரிக்கை கொடுக்கும் பொழுதாவது அதை மதித்து, தனது காதல் சரியான நபர் மீது இல்லை என்று புரிந்து கொள்ளலாமே.

காதல்தான் பெரிது, அதுதான் என் வாழ்வின் மையம் என்று எண்ணினால் அந்த எண்ணம் மனதில் உறுதியாக இருக்க வேண்டும். மதில் மேல் பூனையாக இருப்பதால் வாழ்க்கையில் குழப்பங்கள்தான் மிஞ்சும். சீரான வாழ்க்கை சீர்கேடாகும்.

இதைவிட மோசமானது காதலர்களின் தற்கொலை முடிவு. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் அசட்டு முடிவு அபத்தமான முடிவு. நின்று போராட வேண்டுமே தவிர தன் உயிரைக் கொன்று முடிந்து விடக்கூடாது. தற்கொலை செய்து கொள்பவர்கள், தற்கொலைதான் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு என்று சுலபமாக, சுயமாக முடிவு எடுத்து தன்னலமே பெரிது என்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். உடல்நோக பெற்று, உயிர் நோக வளர்த்து, மகன் / மகள் பற்றிய கனவுகளில் மிதந்து, ஏராளமான எதிர்பார்ப்புகளோடு பெற்றோர் காத்திருக்கும் பொழுது... காதலுக்காக தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சியை அளிப்பது பெற்றவர்களின் நிம்மதியை அழிக்கும் அநியாயமான செயலாகும்.

ஒரு தாய் எப்படி தன் உடலையும், உயிரையும் கொடுத்து வளர்க்கிறாளோ அதுபோல ஒரு தகப்பனும் தன் மகன்/மகளை வளர்ப்பதற்கு பொருளாதார ரீதியாக மிகுந்த பாடு படுகிறார். அத்தனை பாடும் வீண் ஆகும் வகையில் காதல் வலையில் சிக்கிக் கொண்டு, மடிந்து போதலே முடிவு என்ற மனோபாவத்திற்கு ஆளாகி, பெற்றோரை துன்புறுத்தும் பாவமூட்டைகளை சுமக்க வேண்டுமா?

காதல் எனும் உணர்விற்கோ.... காதலுக்கோ நான் எதிரி         அல்ல. காதலித்தவனோடு / காதலித்தவளோடு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போவதுதான் தவறு என்பது என் கருத்து. மகள் ஓடிவிட்டாள்/மகன் ஓடிப்போய்விட்டான் என்கிற அவலம் தரும் அவமானம் அளவற்ற துன்பத்தைக் கொடுக்கும்.

'மகள் எங்கே... எப்படி... தவிக்கிறாளோ... அவள் விரும்பியவன் நல்லவனா...கெட்டவனா...' என்றெல்லாம் யோசித்து யோசித்து வேதனைப்படும் அந்தக் கொடுமை தாய்மார்களுக்கு தாங்க இயலாத துயரம். எனவே எவரையும் துன்புறுத்தாத வகையில் காதல் இருந்தால் அதில் வெற்றி காணலாம்.

காதல், வயது பார்த்து வருவதல்ல. சில தம்பதிகள் ஆரம்பக் காலத்தில் ஏனோ தானோ என்று ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்வார்கள். இதற்குக் காரணம் தம்பதிகளில் ஒருவருக்கு அந்த சுபாவம் இயல்பாகவே இருக்கலாம் அல்லது குடும்ப சூழ்நிலைகள் காரணமாக அவ்விதம் வாழ வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கலாம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel