பறவை வெளியே வருமா
- Details
- Category: மர்ம கதைகள்
- Written by சித்ரலேகா
- Hits: 8931

அரவிந்த் மருத்துவமனை, தூய்மையையும் சேவை மனப்பான்மையையும் தனக்குள் நிறைத்துக் கொண்ட புத்துணர்வுடன் இயங்கிக் கொண்டிருந்தது. வெண்புறாக்கள் போன்ற நர்சுகள் தங்கள் பணிகளில் கவனமாக ஈடுபட்டிருக்க, வெள்ளை கோட் அணிந்த டாக்டர்கள் சுறுசுறுப்பாக நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
"அட என்னம்மா, நீ சீக்கிரம் வா, சீட்டு எழுதற இடத்துல போய் பேரைக் குடுக்கணும்" அங்கே வந்த ஒரு பெரியவர், தயக்கமாய் நின்ற அவருடைய மகளைத் துரிதப்படுத்தினார்.