Lekha Books

A+ A A-

ஏ ரிவர் ரன்ஸ் த்ரூ இட்

A River Runs Through It

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

A River Runs Through It

(ஹாலிவுட் திரைப்படம்)

மெரிக்கப் படம் என்றாலே படம் முழுக்க துப்பாக்கிகளால் குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பார்கள், கார்கள் ஒன்றோடொன்று மோதி வானத்தில் பறந்து கொண்டிருக்கும், ஏராளமான மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் நெருப்பு பிடித்து எரிந்து கொண்டிருக்கும் என்றுதான் நம்மில் பெரும்பாலோரின் மனங்களில் தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட ஒன்றல்ல.

ஏதோ இந்தியத் தன்மை கொண்ட ஒரு படத்தை அல்லது ஒரு தமிழ் திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்னும் உணர்வுதான் நமக்கு இந்தப் படத்தைப் பார்க்கும்போது உண்டாகும். ஒரு கவித்துவத் தன்மை கொண்ட அருமையான குடும்பக் கதை இது.

1992ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தின் இயக்குநர் Robert Redford.

‘A River Runs Through It’ என்ற பெயரில் 1976ஆம் ஆண்டு Norman Maclean எழுதிய நூலை, திரைப்பட வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் Richard Friedenberg.

Western Montana பகுதியைச் சேர்ந்த Missoula என்ற நகரத்திலும், நகரத்தைச் சுற்றியுள்ள அழகு கொட்டிக் கிடக்கும் அருமையான இடங்களிலும் நடைபெறும் கதையே இது.

ஒரு குடும்பத்தில் பிறக்கும் இரண்டு சகோதரர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இப்படம்.

அமைச்சராக இருக்கும் ஒரு தந்தை. அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் நார்மன், இரண்டாவது பையன் பால். 1920களில் அவர்கள் சிறுவர்கள். தந்தையின் நேரடி கண்காணிப்பில் வளரும் மகன்கள் அவர்கள். தன்னுடைய தொழில் நேரம் போக, மீதி நேரங்களில் தன்னுடைய மகன்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதுதான் அந்தத் தந்தையின் வேலையே.

காலை நேரங்களில் அந்தச் சிறுவர்கள் இருவரும் பள்ளிக் கூடத்திற்குச் செல்வார்கள். அங்கு அவர்கள் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் படிப்பார்கள். மதியத்திற்குப் பின்னால் தங்களின் வீட்டைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் Blackfoot River என்ற ஆற்றில் தந்தையுடன் மீன் பிடிக்கச் சென்று விடுவார்கள். தந்தை, இரண்டு மகன்கள் எல்லோரும் தூண்டில் போட்டு மிகவும் ஆர்வத்துடன் மீன்களைப் பிடிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் – மீன் பிடிப்பதில் அவர்களுக்கிடையே மிகப் பெரிய போட்டியே நடக்கும். மகன்களின் ஆர்வத்தையும், தங்களின் தந்தையுடன் அவர்கள் போட்டி போடுவதையும், துள்ளிக் குதிப்பதையும், பயமே இல்லாமல் நீருக்குள் குதித்து அவர்கள் நீந்துவதையும் கரையில் அமர்ந்து புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பாள் அவர்களுடைய அன்னை.

பையன்கள் படிப்படியாக வளர்கிறார்கள். மூத்த மகன் நார்மன் கிழக்கு திசையிலிருக்கும் ஒரு கல்லூரியில் கல்வி கற்பதற்காக செல்கிறான். அங்கு ஆறு வருடங்கள் தங்கியிருக்கிறான். வீட்டிற்குக் கூட அந்தக் கால கட்டத்தில் அவன் வந்ததே இல்லை. இதற்கிடையில் பாலுக்கு ஒரு பத்திரிகையாளர் வேலை கிடைக்கிறது. அதில் தனக்கென்று ஒரு பெயரையும் அவன் பெற்று வைத்திருக்கிறான்.

வாலிபனான நார்மன் வீட்டிற்கு வருகிறான். அண்ணனும், தம்பியும் கோடை நாட்களில் மீண்டும் ஆற்றுக்குச் செல்கிறார்கள்… நீந்துகிறார்கள்… நீருக்குள் நின்று தாவிக் குதிக்கிறார்கள்… தந்தையுடன் சேர்ந்து மீன் பிடிக்கிறார்கள். சிறுவர்களாகப் பார்த்த தன் மகன்கள் வளர்ந்து வாலிபப் பருவத்தில் இருப்பதைப் பூரிப்புடன் பார்த்துக் கொண்டே மீன் பிடிக்கிறார் தந்தை. அவர்கள் எல்லோரையும் அன்புடனும், பாசத்துடனும், பெருமையுடனும் பார்த்து தன் மனதிற்குள் உவகை அடைந்து கொண்டிருக்கிறாள் அவர்களின் தாய்.

வருடங்கள் சில நகர்கின்றன. பால் எதற்கும் அஞ்சாத, துணிச்சலான, போராட்ட குணம் கொண்ட பத்திரிகையாளனாக இருக்கிறான். நார்மன் கட்டுப்பாடுகள் நிறைந்த, மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த ஆசிரியராக ஆகிறான். அவன் தன்னுடைய ஆவேசத்தையும், கோபத்தையும் தன்னுடைய எழுத்துக்களில் காட்டுகிறான். அவனுக்கொரு காதலி கிடைக்கிறாள். அவளைச் சந்திப்பதிலும், அவளுடன் உரையாடுவதிலும், அவளுடன் தன் மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதிலும் அவன் இன்பன் காண்கிறான்.

அண்ணன் நார்மன் ஒரு கோடு போட்டு தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒரு ஒழுங்கான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்க, இளம் வயதிலிருந்தே எதற்கும் பயப்படாத, எதையும் நேருக்கு நேராகச் சந்திக்க எண்ணும் துணிச்சல் மனம் கொண்ட பால், சூதாட்டங்களிலும் மது அருந்துவதிலும் தன் மனதைச் செலுத்துகிறான்.

அதைத் தொடர்ந்து இயல்பாக போய்க் கொண்டிருந்த அந்த அருமையான குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகள் உண்டாகின்றன. அந்த இனிய குடும்பத்து உறுப்பினர்களின் மனங்களில் சந்தோஷத்திற்குப் பதிலாக, கவலைகள் வந்து ஆக்கிரமிக்கின்றன.

தன்னுடைய மூத்த மகனின் வாழ்க்கை சீறிய முறையில் நன்றாக போய்க் கொண்டிருக்க, இளம் வயதிலிருந்தே அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்த இளைய மகனின் வாழ்க்கை திசை மாறி போய்க் கொண்டிருக்கிறதே என்பதை நினைத்து, கண்ணீர் விடுகிறார் அவர்களின் தந்தை. தவறான பாதையில் செல்லும் தன் மகனை திருத்துவதற்காக அவர் எவ்வளவோ முயல்கிறார். சில நேரங்களில் அவராலேயே தன் மகனின் போக்கைச் சரி செய்ய முடியாத அளவிற்கு நிலைமை ஆகி விடுகிறது.

அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? சந்தோஷப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருந்த அந்த குடும்பத்திற்கு மீண்டும் சந்தோஷம் கிடைத்ததா? தன் மகன்களையே தன்னுடைய உலகம் என்று நினைத்த அந்த தந்தை மனதில் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு நிலைமைகள் மாறினவா? திசை தவறி, தவறான பாதைகளில் நடந்து திரிந்த அந்த இளைய மகன் திருந்தி, ஒழுங்கான பாதைக்கு வந்தானா? இயற்கையுடன் ஒன்றிப் போய், குதூகலத்துடன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து முடித்த அந்த அன்பு உள்ளங்களுக்கு நிம்மதி உண்டானதா?

இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை தருகிறது, ‘A River Runs Through It.’

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel