
அதற்கு மேல் சுகுமார் இரண்டு வருடங்கள் உயிருடன் இருந்தார். உடல் நிலை எப்போதெல்லாம் சரியாக இருக்கிறதோ, அந்தச் சமயத்தில் அவர் எழுதுவார், படம் வரைவார். பெரும்பாலும் ‘நான்சென்ஸ் குழந்தைப் பாடல்கள்’ என்ற தொகுப்பில் இடம் பெற்றவற்றைத்தான் அவர் அப்போது எழுதினார் (அவற்றில் பெரும்பாலானவை ‘சந்தேஷ்’ பத்திரிகையில் பிரசுரமானவையே). அந்தத் தொகுப்பின் பெயர் ‘அபோல் டபோல்’ (நான்சென்ஸ் என்பது அதன் அர்த்தம்). அந்தப் புத்தகத்திற்காகத்தான் இன்று கூட அவர் மிகவும் உயர்வாக நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். தான் அதன் பக்கங்களை வடிவமைத்தாலும், அதன் இறுதி வடிவத்தைப் பார்ப்பதற்கு நீண்ட நாட்கள் அவர் உயிருடன் இருக்கவில்லை. அவருடைய மரணத்திற்குப் பிறகு ஒன்பது நாட்கள் கழித்துத்தான் அந்தப் புத்தகம் வெளியே வந்தது.
1923ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம் தேதி சுகுமார் ரே, தன்னுடைய சொத்துக்களை தன் இரண்டு வயது மகனுக்கு அளித்து விட்டு, மரணத்தைத் தழுவினார். தன் இறுதி மூச்சை விடும் தருணத்தில், தன்னுடைய சிறிய ‘மானிக்’ தன் பெயரைப் பெரிய அளவில் காப்பாற்றக் கூடிய அளவிற்கு மிகப் பெரிய மனிதராக வருவான் என்ற உண்மை அவருக்குத் தெரியுமா?
தொடரும்...
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook