திருட்டு நாய்
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6672

திருட்டு நாய்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
பத்மநாபனுக்கு வரும் 'சிங்ங' மாதத்தில் மூன்று வயது முடிகிறது. எனினும், அவன் தாய்ப் பால் குடிக்க வேண்டும். சோறு, கஞ்சி எதுவும் பத்மநாபனுக்குப் பிடிக்காது. பசிக்கும்போது தாய்ப்பால் கட்டாயம் கிடைக்க வேண்டும். கிடைக்காவிட்டால், கிடைக்கும் வரை அவன் அழுவான். அதுதான் பத்மநாபனின் குணம். அழ ஆரம்பித்து விட்டால், சிறிது கூட நிறுத்த மாட்டான்.