தேடித் தேடி...
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 7077

கருப்பு புள்ளிகளைக் கொண்ட ஒரு வெள்ளைநிற நாய் அங்கு இருந்தது. அவன் அப்போது என்னைப் பார்த்து பற்களைக் கடித்து இலேசாக முனகியபடி இருப்பான் தனிப்பட்ட முறையில் என்மீது அவன் கொண்ட வெறுப்பே அதற்குக் காரணம்.
அவனைத் தவிர வேறு நான்கு நாய்களும் அங்கு இருந்தன. அந்த ஐந்து நாய்களுமே ஒரே வயதைக் கொண்டவைகளாக இருந்தாலும் அந்த நாய்களில் எதற்கும் எச்சில் இலைகள் இருக்கும் பீப்பாய்களை நெருங்குவதற்கான தைரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம்- நாங்கள் அதற்குச் சம்மதித்தால்தானே! எங்களுக்கு வேண்டிய அளவிற்குச் சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் கிளம்பி விடுவோம். அதற்குப்பிறகு நான்கு பக்கங்களிலும் பயந்தபடி பார்த்தவாறு பதுங்கிப் பதுங்கி மற்ற நாய்கள் எச்சில் இலைகள் இருக்கும் இடத்தை நோக்கி வருவார்கள்.