வாசகன்
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 7488

அந்த வீட்டை விட்டு நான் வெளியே வந்தபோது இரவாகிவிட்டது. சமீபத்தில் அங்கு கூடியிருந்த நெருங்கிய நண்பர்களுக்கு பிரகாசமான என்னுடைய கதையை நான் படித்துக் காட்டினேன். அவர்கள் என்னை அளவுக்கும் அதிகமாகப் புகழ்ந்து தள்ளினார்கள். ஆள் அரவமற்ற தெருவில் நடக்கும்போது, என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை நான் அனுபவித்ததே இல்லை என்பதை உணர்ந்தேன்.