Lekha Books

A+ A A-

உன்னை விடமாட்டேன் - Page 3

unnai vidamaten

இவன் இவ்விதம் கூறியதைக் கேட்டதும் கல்யாணி துடித்தாள். மறுகணம் தைரியமானாள்.

 “சரி, மேடம்… இவன்… என்னை… இப்ப விரும்பலைன்னு சொல்லிட்டான். என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னும் சொல்லிட்டான். ஆனா… எனக்கு இவனும், இவனோட அம்மா, அப்பாவும் எழுதிக் குடுக்கணும். என்னோட அம்மா, அப்பாவும் எழுதிக் குடுக்கணும்…”

 “என்னம்மா எழுதிக் குடுக்கணும்?” லஷ்மி கிருஷ்ணன் கேட்டாள்.

“என்னை வேற யாருக்கும் கல்யாணம் பண்ணிக் குடுக்க மாட்டோம்ன்னு என்னோட அப்பா, அம்மா எழுதிக் கொடுக்கணும். அதே மாதிரி இவனும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. இதை அவங்க அம்மா, அப்பா எனக்கு எழுதித் தரணும்…”

இதைக் கேட்டு அகமதின் அப்பாவும், அம்மாவும் மிரண்டனர். திகைத்தனர். அதிர்ந்தனர்.

கல்யாணியின் அருகே வந்து அழுதார் பஷீர்.

“அம்மா… நீ என் பொண்ணு மாதிரிம்மா. இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா எங்க மானம் கப்பலேறிடும்மா…” என்று கெஞ்சி கேட்டு கை கூப்பினார்.

“நானும் ஒரு பொண்ணுதான்ப்பா. அதை நினைக்க மாட்டேங்கறிங்க... என்னை மாதிரி இன்னும் பல பொண்ணுங்க இவனை மாதிரி ஆளுக கிட்ட ஏமாறக் கூடாதுன்னுதான்ப்பா நான் இதை செய்யச் சொல்றேன்…” தீர்க்கமாகக் கூறினாள் கல்யாணி.

முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி மகனின் அருகே தள்ளாடியபடி சென்று உட்கார்ந்தார் பஷீர்.

கல்யாணியின் அம்மா “எங்க மகள் சொல்றது சரி. நாங்க அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம். நீங்களும் உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டோம்னு எழுதிக் குடுங்க” என்றார்.

“கல்யாணி, நீ இவன் மேல உயிரையே வச்சிருக்க. நீயே அவன்ட்ட பேசு. ஒரு முடிவு எடு…” லஷ்மி கிருஷ்ணன் கூறியதும் கல்யாணி எழுந்து அகமதின் அருகே சென்றாள்.

அம்மா, அப்பாவின் அருகே பூனை போல பயந்தபடி உட்கார்ந்திருந்த அகமதுவின் கையைப் பிடித்தாள்.

“நீ ஏன் இப்படி பண்ற? என் மேல எவ்வளவு காதலா இருந்த? நாம எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்? அதையெல்லாம் நினைச்சுப்பாரு. என்னை ஏத்துக்கோ. கல்யாணம் பண்ணிக்கோ… ப்ளீஸ்… என் வாழ்க்கையே நீதான். என் உலகமே நீதான். என் சகலமும் நீதான்…”

அகமதின் மனம் கரையவே இல்லை. தன் கையைப் பிடித்திருந்த கல்யாணியின் விரல்களை மெல்ல தள்ளி விட்டு, தன் அருகே உட்கார்ந்திருந்த அப்பா பஷீரின் கையோடு கை சேர்த்துக் கொண்டான்.

“இப்பிடி ஒரு கல் நெஞ்சக்காரனை நீ இன்னும் ஏம்மா கெஞ்சிக்கிட்டிருக்க?” வருத்தப்பட்டுப் பேசினார் லஷ்மி கிருஷ்ணன்.

 “நான் எனக்காக மட்டும் கெஞ்சலை மேடம். இவன் கல்யாணம் பண்ணிக்கப் போற இவனோட அக்கா மகளுக்கு பதினெட்டு வயசுதான் ஆகுதாம். அந்தப் பொண்ணை இந்த துஷ்டன்ட்ட இருந்து காப்பாத்தலாம்னு நினைச்சேன். ஆனா தன் பொண்ணைக் கட்டிக்க போறவன் இவ்வளவு மோசமானவன்னு தெரிஞ்சும் அந்தப் பொண்ணோட அம்மா இவனுக்கு பொண்ணு குடுக்க வரிஞ்சு கட்டிக்கிட்டு காத்திருக்காங்க. பொண்ணோட எதிர் காலத்தை விட தங்களோட குடும்ப கெளரவம்தான் பெரிசுன்னு நினைக்கற இவங்களோட வறட்டு கெளரவத்தைப் புரிஞ்சுக்கிட்டேன். அது மட்டுமில்ல மேடம்… ஒருத்தியை கல்யாணம் கட்டிக்கிட்டு மறுபடியும் என்னைப் போல இன்னொருத்தி கூட இவன் அலையமாட்டான்னு என்ன நிச்சயம்? கண்டிப்பா கட்டினவளை ஏமாத்திட்டு..., பழகற பெண்களை மாத்திக்கிட்டே இருப்பான். இவனால வேற பொண்ணுங்க பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைச்சும்தான் நான் இப்படி பேசறேன். இவன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கப்புறம் இவன் வேற எந்த பொண்ணையும் ஏறெடுத்துக் கூட பார்க்க விடாம நான் இவனை கண்காணிக்கணும். இவன் தினம் தினம் என்னைப் பார்த்து… இவகிட்ட மாட்டிக்கிட்டேமேன்னு நினைச்சு, உணர்வுகளால உயிரோட சாகணும். இவனை வேற யாரையுமே கல்யாணம் பண்ணிக்க விடக் கூடாது. இப்படிதான் இவனுக்கு பாடம் கத்துக்குடுக்கணும்னு நினைச்சேன். அதை வெளிப்படையா சொல்லிட்டேன்...”

“ஹேட்ஸ் அஃப் டூ யூமா கல்யாணி. நீ எவ்வளவு பெரிய சாதனை பண்ணி இருக்க தெரியுமா? இவனை மாதிரி ஆளுக, இனிமே பொண்ணுகளை காதல்ங்கற பேரால ஏமாத்தறதுக்கு யோசிக்கவே பயப்படுவாங்க...”

அப்போது வேகமாக எழுந்தார் பஷீர். யாரும் எதிர்பாராத வகையில் தடால் என்று கல்யாணியின் காலில் விழுந்தார்.

“உன் பிடிவாதத்தை எனக்காக விட்டுக் குடுத்துடுமா. நான் இவனுக்கு நிச்சயம் செஞ்ச கல்யாணம் நடக்கலைன்னா எங்க குடும்ப கெளரவம் குலைஞ்சு போயிடும்....” கெஞ்சினார் பஷீர்.

மனதை கல்லாக்கிக் கொண்டு, தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை வெளிப்படுத்தினாள் கல்யாணி.

அகமதுவின் குடும்பத்தினர் தலை குனிந்தனர். கல்யாணியை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் லஷ்மி கிருஷ்ணன்.

 “உன்னோட இந்தப் போராட்டத்தைப் பத்தி பத்திரிகையில நானே எழுதப் போறேன். டி.வி-ல கூட பேசப் போறேன். ஏமாத்தற ஆண்களுக்கு இது ஒரு சவுக்கடி. ஆனா… பொண்ணுகளும் இந்தக் காதல் வலையில சிக்கிக்காம, காதலிக்கறவன் அதுக்கு தகுதி உள்ளவனான்னு யோசிக்கணும். பெற்றோர் பார்த்து பண்ணி வெச்ச கல்யாணத்திலேயே பிரச்னை வருது. நீங்களாவே தேடிக்கிட்ட வாழ்க்கையில யாரோட உதவியும் இருக்காது. அதனால முன் எச்சரிக்கையா இருந்து செயல்படணும். உன்னோட இதை தைரியம் எல்லா பெண்களுக்கும் வரணும். அதே சமயம், இந்தக் காதல் ஒத்து வருமான்னு நீ யோசிக்கலை. அது உன்னோட தப்பு. படிச்ச பொண்ணான நீயே பெண்மைக்குரிய மென்மையான உணர்வுல இவனோட காதலை சத்தியம்ன்னு நம்பிட்டே. உன்னோட எதிர்காலத்தைப் பத்தி உன்னை பெத்தவங்களுக்கு உன்னை எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும். எல்லாத்தையும் நீ நொறுக்கிட்ட. சரி... நடந்தது நடந்து போச்சு. கல்விங்கறது ஒரு கடல் மாதிரி. நீ இன்னும் மேல நிறைய படி. ‘டைம் இஸ் த பெஸ்ட் மெடிஸின்’ அப்படின்னு சொல்லுவாங்க. காலம் உன்னோட துக்கத்தை மாத்தும். அப்போ உன் மனசும் மாறும். நிறைய படிச்சு வாழ்க்கையில முன்னேறு. உன் மனசை சமூக, சமுதாய சேவைகள்ல்ல ஈடுபடுத்தி வாழ முயற்சி செய். ஆல் த பெஸ்ட்.” லஷ்மி கிருஷ்ணன் விடை பெற்று கிளம்பினாள்.

(சமீபத்தில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை ‘உன்னை விட மாட்டேன்’. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. நிஜ வாழ்க்கையில், காதலனின் அப்பா பஷீர் கெஞ்சினார் என்பதற்காகவும், அகமதுவின் காதல் உண்மையானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டதாலும் இளகிய மனதுடன் தன் முடிவை விட்டுக் கொடுத்திருந்தாள் கல்யாணி. தைர்யமான பெண், திடீரென இரக்கம் கொண்டு இறங்கிப் போனதை மாற்றி, கதையின் முடிவை, எனது கற்பனையில் வேறு விதமாக எழுதியுள்ளேன்.)

-சித்ரலேகா


Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel