இராமாயணம் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6560
சந்தோஷம்... நல்லா இருக்கட்டும். எதுக்கு தொந்தரவு செய்யணும்னு நினைச்சுத் திரும்பி வந்துட்டேன். பிறகு... “ஜெயா, உங்களைப் பற்றிய எல்லா கதைகளும் எனக்குத் தெரியும்.”
தன் நெஞ்சில் ஓங்கிக் குத்தியதைப் போலிருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக ஜெயா நின்றிருந்தாள்.
“பாலசந்திரனைப் பற்றி முதல்ல சொன்னப்போ, என்மேல கோபம் வந்துச்சு... அப்படித்தானே? இப்போ? அவன் விஜயலட்சுமிக்கு சொந்தம்னு ஆயிட்டான்.”
கடலிலிருந்து புறப்பட்டு வந்து காற்று திரைச்சீலைகளை இப்படியும் அப்படியுமாக ஆடச் செய்தது.
“பரவாயில்ல...” - ராஜன் ஜெயாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே தொடர்ந்தான்: “ஜெயா, வாழ்க்கைன்றது நேர்க்கோடு இல்ல...”
அவன் சாய்ந்து உட்கார்ந்தான். மிகவும் களைத்துப் போயிருந்தது மாதிரி இருந்தது.
“வேணும்னா, படுங்க...”
ராஜன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டுக் கேட்டான்:
“ஜெயா, இன்னைக்கு நீங்க எங்கேயாவது போகணுமா?
“இல்லை”
“இங்கே யாராவது வருவாங்களா?”
“இல்ல..”
“அப்படின்னா நான் இந்த இரவு இங்கே தங்கட்டுமா?”
“கேக்குறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு!”
அவன் குளித்து வேறு ஆடை அணிந்தான். உணவு சாப்பிட்டான்.
தூங்குதவதற்காகப் படுத்த போது அவனுக்கு அருகில் போய் ஜெயா உட்கார்ந்தாள். இரண்டு பேரும் ஒருவரையொருவர் அமைதியாகப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்கள்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,