மகாசக்தி! - Page 5
- Details
- Category: பொது
- Published Date
- Written by chitralekha
- Hits: 6736
ஒரு குடும்பம் வாழும் இல்லம் ஒரு சொர்க்கமாக இருப்பதும், நரகமாக இருப்பதும் பெண்ணிடத்தில்தான் உள்ளது. பெண் களுக்கு, தங்கள், குடும்பத்தினர் அனைவரும் தன் சேவையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இதில் சுயநலம் ஏதும் இல்லை. எல்லாமே தன்னுள் அடக்கம் என்ற எண்ணத்தில் அவளுக்கு ஒரு மனதிருப்தி. அவ்வளவே.
பெண்கள் காட்டும் அபரிதமான பாசம்தான் எல்லா ஆண்களையும் மனித நேயத்தோடு வாழும் வழிகளைக் காட்டுகிறது. மேலும் ஆண்களின் திறமைகளை வெளியே தெரியும்படி செய்வதும் பெண்களின் பாசமும், நேசமும்தான். 'எனக்காக ஒருத்தி காத்திருக்கிறாள், என் நலனில் அக்கறை செலுத்த ஒரு பெண் இருக்கிறாள். என் வாழ்க்கையின் அனைத்திலும் நான் வெற்றி காண, எனக்காக பாடுபடுபவள் பெண், பிரார்த்தனை செய்பவள் பெண்', என்று ஒவ்வொரு ஆணும் நம்புகிறான். 'வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறாள்' என்ற எண்ணமே அவனது மனதில் இனிமையை பரவச்செய்து, பரவசம் கொள்ளவைக்கிறது.
அன்பே உருவான பெண்களை சந்திப்பது நிம்மதி. அவர்களது அன்பான பேச்சைக் கேட்பது நிம்மதி. அவர்கள் அருகே இருந்தால் ஆடவர்களுக்கு தோன்றும் ஆறுதலும், ஆக்கப் பூர்வமான உணர்வும் அளவிட இயலாதவை. பாலில் தயிர், மோர், வெண்ணெய், நெய் அடங்கியுள்ளது. பாலை மட்டும் பார்க்கும் பொழுது இதற்குள் அடங்கியுள்ள தயிர், மோர், வெண்ணெய், நெய் இவை கண்ணுக்கு தெரியாது. அது போல பெண்ணிற்குள் அடங்கியுள்ள சக்திகளை வாழ்ந்து, அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
எதையும் அழகாகவும், ஆணித்தரமாகவும் சொல்லத் தெரிந்தவள் பெண். தன் வாழ்வில் தோல்விகள் ஏற்பட்டு விட்டால், அதை தன் மனதிற்குள் மறைத்து அந்த தோல்வியின் தாக்கம் தரும் நினைவை மறந்து, குடும்பக் கடமைகளிலும், குழந்தைகள் நலனிலும் ஈடுபடுபவள் பெண்.
வாழ்க்கையை இழந்து தனி மரமாய் நிற்கும் பெண்கள் கூட அழுது முடித்த பின், 'என் வாழ்வு எங்கேயும் காணாமல் போகவில்லை. மறுபடியும் அதை நான் கண்டுபிடிப்பேன்' என்று துணிவே துணையாக, ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர்த்தெழுகிறாள். அதற்குரிய வேகமும், விவேகமும், மனவலிமையும் அவளுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டே இருக் கின்றன. அந்த உணர்வுகள் வெளிப்படுவதற்குரிய சந்தர்ப்பங் களின் முடிவு, படுதோல்வியாகவும் இருக்கலாம். பெரும் வெற்றியாகவும் இருக்கலாம். தோல்வியையே மாபெரும் வெற்றியாக மாற்றி வாழ்ந்து காட்டுபவள் பெண். பெண் அற்புதமான பிறவி. அபூர்வமான மனம் கொண்டவள். அழகான எண்ணங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருப்பவள். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாத ஆதவனைப் போல ஆயிரமாயிரம் வேதனைகள் வந்தாலும் ஆழமாக சிந்தித்து அமைதியாய் செயல்படுபவள்.
மகாசக்தியைத் தன்னுள் கொண்ட அவள், தன்னடக்கத்துடன் வாழ்வது குறித்து மனிதகுலம் பெருமைப்பட வேண்டும். இந்திய மண்ணின் பெண்கள், இந்தியாவிற்குபெருமை சேர்க்கப் பிறந்தவர்கள். இத்தகைய மகாசக்தி கொண்ட பெண் இனத்தை வணங்குவோம். வாழ்த்துவோம்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,