Lekha Books

A+ A A-

பாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர் - Page 3

Bashu, the Little Stranger

Naiயின் மகனும், மகளும் பாஷுவிடம் மிகவும் நெருக்கமாகி விடுகிறார்கள். ஆனால், பக்கத்து வீடுகளிலிருக்கும் சிறுவர்கள் பாஷுவைப் பார்த்து கேலி செய்கிறார்கள். அவனுடைய நிறத்தைப் பார்த்து... தோற்றத்தைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். அதற்குப் பதிலாக பாஷு அரேபிய மொழியில் என்னவோ கூறுகிறான். அது அவர்களுக்குப் புரியவில்லை.

அந்த ஊரிலிருக்கும் Naiயின் உறவினர்கள், அவளுடைய வீட்டில் வெளியூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் இருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு, அங்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேநீர் போட்டு தருகிறாள் Nai. அவர்கள் கறுப்பு நிறத்தைக் கொண்ட பாஷுவைப் பார்க்கிறார்கள். 'யார் என்றே தெரியாத இந்த பையனை வீட்டில் வைத்திருப்பது தப்பு. இவனை வெளியேற்று' என்கிறார்கள். அவர்கள் கூறுவதை ஒரு ஓரத்தில் கவலையுடன் கேட்டவாறு நின்று கொண்டிருக்கிறான் பாஷு. ஆனால், அந்த உறவினர்கள் கூறியதைப் பொருட்படுத்தாமல் 'அவன் இங்குதான் இருப்பான். வெளியேற்ற முடியாது' என்று கூறி, அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பி, கேட்டை அடைக்கிறாள் Nai. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் பாஷு.

பக்கத்து வீடுகளிலொன்றில் இருக்கும் பெரியவர் ஒருவர்தான் Nai கூறுவதை, கடிதமாக அவளுடைய கணவனுக்கு எப்போதும் எழுதுவார். அவளுடைய கணவன் ஒரு போர் வீரனாக இருந்தவன். தனக்கு ஒரு வேலை தேடி பல மாதங்களுக்கு முன்பு நகரத்திற்குச் சென்றவன். இன்னும் திரும்பி வரவில்லை. 'நம் வீட்டில் இப்போது புதிதாக ஒரு விருந்தாளி வந்திருக்கிறான். அவன் பெயர் பாஷு. நம் பிள்ளைகளுடன் அவனையும் ஒரு பிள்ளையாக வைத்துக் கொள்ள நான் விரும்புகிறேன் அதற்கு உங்களுடைய அனுமதி வேண்டும்' என்று தன் கணவனுக்கு எழுதும் கடிதத்தில் அவள் குறிப்பிடுகிறாள். அந்தக் கடிதத்திலேயே 'அறுவடைக்கு முன்பே நீங்கள் வீட்டிற்கு வந்தால், நன்றாக இருக்கும்' என்றும் கேட்டுக் கொள்கிறாள்.

அவ்வப்போது தன் கண்களுக்கு முன்னால், தன்னுடைய தாய் கறுப்பு பர்தா அணிந்து நிற்பதைப் போல உணர்கிறான் பாஷு. சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், குண்டு போட அந்தச் சத்தத்தைக் கேட்டு நடுங்குகிறான் பாஷு. அதைத் தொடர்ந்து, அவன் காய்ச்சல் வந்தவனைப் போல பிதற்றுகிறான், வெட வெடக்கிறான். Nai அவனை அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்கிறாள்.

Naiக்கு மிகவும் உதவியாக இருக்கிறான் பாஷு. வாய்க்காலிலிருந்து வாளியில் நீர் எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் தருகிறான். எவ்ளவு பெரிய சுமையையும் தூக்குகிறான். சோளக் காட்டில், கதிர்களைத் தேடி வரும் பறவைகளை விரட்டுகிறான். Naiயைப் போலவே, வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்து அவற்றின் குரலில் கத்தி, இரைக்காக அழைக்கிறான். அதனால்தான் தன் கணவனுக்கு எழுதிய கடிதத்தில் 'நம் வீட்டிலிருக்கும் பாஷு தான் உழைப்பதைவிட, மிகவும் குறைவாகவே சாப்பிடுகிறான்' என்று எழுதினாள் Nai.

நகரத்திலிருக்கும் சந்தைக்கு தங்களின் பொருட்களுடன் செல்கிறாள் Nai. செல்லும்போது தன் பிள்ளைகளுடன், பாஷுவையும் அவள் அழைத்துச் செல்கிறாள். ஆடு, கோழி, கோழி முட்டைகள் என்று ஒவ்வொன்றையும் அவர்கள் கூவிக் கூவி விற்கிறார்கள். வியாபாரத்தில் Naiக்கு மிகவும் உதவியாக இருக்கிறான் பாஷு. கோழியை வாங்கும் ஒருவர் குறைவாக பணத்தைத் தந்துவிட, கூர்ந்து கவனித்த பாஷு, அதை Naiயிடம் கூறுகிறான். அதைத் தொடர்ந்து, கோழி வாங்க வந்த மனிதன் சரியான பணத்தைத் தருகிறான். Naiயுடன் இருக்கும் கறுப்பு நிற சிறுவனையே எல்லோரும் பார்க்கின்றனர்.

சற்று தள்ளி இருந்த கடையில் தொங்கிக் கொண்டிருந்த வயலட் நிற சட்டையை பாஷு தொட்டுப் பார்க்கிறான். அந்த காட்சியை Naiயும் பார்க்கிறாள். அவனிடம் ஒரு பண நோட்டைக் கொடுத்து, 'உனக்குப் பிடித்தமானது எதையாவது வாங்கிக் கொள்' என்று கூறுகிறாள் Nai. பாஷு பணத்துடன் அங்கிருந்து நகர்கிறான்.

பாஷு தொட்டுப் பார்த்த வயலட் நிற சட்டையை அவனுக்காக வாங்குகிறாள் Nai. நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. பாஷு திரும்பி வரவேயில்லை. அவன் எங்கு போனான்? கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டன. ஆள் அரவமே இல்லை. அந்த பிந்தைய இரவு வேளையில் அந்த காலியான சந்தையில் Naiயும், அவளுடைய பிள்ளைகளும் மட்டும்...

பாஷு இல்லாமல், தன் இரு பிள்ளைகளுடன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வருகிறாள் Nai. பையன் ஓடி விட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, மீண்டும் Naiயின் சொந்தக்காரர்கள் சந்தோஷத்துடன் அவளுடைய வீட்டிற்கு வருகிறார்கள். Nai அவர்களுக்கு தேநீர் தயாரித்துத் தருகிறாள். 'நாங்கள் அப்போதே சொன்னோம். நீதான் கேட்கவில்லை. அந்தப் பையன் ஓடியது ஒருவிதத்தில் நல்லது. இனி நீ நிம்மதியாக இருக்கலாம்' என்கிறார்கள் அவர்கள். ஆனால், பாஷுவைப் பற்றிய நினைவில் மிகவும் கவலையுடன் இருக்கிறாள் Nai.

அப்போது தூரத்தில் ஏதோ சத்தம் கேட்கிறது. பார்த்தால்... கையில் ஒரு குச்சியுடன் பாஷு வந்து கொண்டிருக்கிறான். அவ்வளவுதான்- Naiயின் உறவினர்கள் அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்கள். நடந்து வந்து கொண்டிருந்த பாஷு, கால் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து விடுகிறான். நீச்சல் தெரியாததால், ஓடும் நீரில் அவன் உயிருக்குப் போராடுகிறான். வீட்டிற்குள் ஓடிச் செல்லும் Nai, ஒரு பெரிய வலையுடன் திரும்பி வருகிறாள். அதைப் போட்டு, மீனைப் பிடிப்பதைப் போல, பாஷுவை வலைக்குள் பிடித்து கரைக்குக் கொண்டு வருகிறாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel