
அன்று இரவு ஜின்-ஆ தன் கையை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். இரத்தம் வழிய படுத்திருக்கும் ஜின்-ஆவைப் பார்க்கும் ஹை-மி அவளை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறாள்.
ஹை-மியின் 'பாய் ஃப்ரண்ட்' அவளைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனை வெறுப்புடன் போகச் சொல்கிறாள் ஹை-மி. 'நீ எங்கள் வீட்டிற்கு வந்து ஜின்-ஆவுடன் படுத்தாய் அல்லவா?' என்கிறாள் அவள். ஆனால் அவனோ 'வந்தது உண்மை. ஆனால், உன் ஞாபகம் வந்து, எதுவுமே பண்ணாமல், நான் திரும்பிச் சென்று விட்டேன்' என்கிறான். அருகில் நின்றிருந்த ஜின்-ஆவிடம் 'இவர் கூறுவது உண்மையா?' என்று அவள் கேட்க, 'பொய்... என்னுடன் அவர் மூன்று தடவைகள் உடலுறவு கொண்டார்' என்கிறாள். அந்த 'பாய் ஃப்ரண்ட்'டை விரட்டியடிக்கிறாள் ஹை-மி. அதை புன்னகைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜின்-ஆ. தான் கூறியது பொய் என்று அந்த குறும்புக்காரிக்குத்தான் தெரியுமே!
ஜின்-ஆ வெளியே சென்றிருக்க, அவளின் அறையைப் பரிசோதிக்கிறாள் ஹை-மி. அங்கிருக்கும் நூல்கள், ஜின்-ஆ தன் கைப்பட வரைந்த அருமையான ஓவியங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் ஹை-மி அவள் மீது உயர்ந்த மதிப்பு கொள்கிறாள். தான் இதுவரை அவளை கேவலமாக நினைத்ததற்காக வருத்தப்படுகிறாள்.
கடலோரம். ஜின்-ஆ நின்று கொண்டிருக்கிறாள். மீண்டும் அந்த 'சகோதரன்' வருகிறான். பணம் கேட்டு ஜின்-ஆவை நச்சரிக்கிறான். அப்போது அங்கு வந்த ஹை-மியின் தந்தை 'என் மகனை ஏமாற்றி, புகைப்படங்களை வாங்கிச் சென்று விட்டார்கள். பணம் எதுவும் தரவில்லை' என்கிறார். அதைக் கேட்டு கோபமடையும் 'சகோதரன்' அந்த மனிதரிடம் 'நீயும் ஜின்-ஆவுடன் படுத்தவன்தானே?' என்று தாக்க முயற்சிக்கிறான். அந்த மனிதர் 'சகோதர'னை அடித்து, உதைக்கிறார். தன் தந்தையும், தம்பியும் கூட ஜின்-ஆவை உடல்ரீதியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்து, அவமானத்துடன் நிற்கிறாள் ஹை-மி.
'இவளைப் பார்த்தாலே, படுக்க தோன்றுகிறது. நான் கண் காணாத இடத்திற்கு எங்காவது போய் விடுகிறேன். இனி நான் வர மாட்டேன்' என்று அந்த 'சகோதரன்' குருதி படிந்த ஆடையுடன் நடக்க முடியாமல் நடந்து செல்கிறான், அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள் ஜின்-ஆவும், ஹை-மியும்.
புதிய தோழிகளான ஜின்-ஆவும், ஹை-மியும் ஒருவர் முதுகில் இன்னொருவர் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அன்று இரவு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஜின்-ஆ அன்று 'தொழில்' பண்ண முடியாது. அதனால் தன் தோழி சிரமப்படக் கூடாது என்பற்காக, அவளுக்கு பதிலாக ஹை-மி அவனுக்கு தன் உடலைப் பணயம் வைக்கிறாள். அன்று முதல் தடவையாக தன் கன்னித் தன்மையை அந்தப் பெண் இழக்கிறாள்- தன் அன்பு தோழி ஜின்-ஆவிற்காக.
மாலை நேரம். கடல் பகுதி. உயரமான இரும்புத் தூணின் விட்டத்தில் கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஜின்-ஆ, ஹை-மி என்ற அந்த அன்பு தோழிகள் தங்களை மறந்து சிரித்தவாறு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மன மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
படம் முடியும்போது 'கிம் கி-டுக்கின் பெயர் போட்டவுடன், என்னை மறந்து நான் கைகளைத் தட்டினேன். 'இயக்குநர் என்றால் இவரல்லவா இயக்குநர்!' என்று என் மனம் கூறியது.
Jin-a வாக நடித்திருக்கும் Lee Ji-Eun உண்மையிலேயே ஒரு அழகு தேவதைதான்! என்ன அருமையான நடிப்பு! இப்போது கூட அந்த பெண்ணின் முகம் என் மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.
Hye-mi யாக நடித்திருக்கும் Lee Hae -பொருத்தமான தேர்வு!
படத்தின் கலை இயக்குநரும் Kim Ki-duk தான். ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற Noosa Film Festival இல் சிறந்த art director க்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook