Lekha Books

A+ A A-

குமாருக்கு வந்த மொட்டைக் கடிதம்!

kumarukku-vandha-mottai-kaditham

னைவி லதா உல்லாசமாக இருந்ததை நான் அறிவேன். தொழில் நிமித்தமாக நீங்கள் அடிக்கடி வெளியூர், சென்று விடுவதால் இங்கே லதாவை மற்றவன் கவனித்துக் கொள்கிறான். உங்கள் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் நலம் விரும்பும் நண்பன்.

தனது அலுவலக அறையில் அமர்ந்து கடிதத்தைப் படித்த குமாருக்கு வியர்த்தது.

‘தான் லதா மீது எத்தனை அன்பு வைத்துள்ளோம்? அவள் தனக்கு துரோகம் செய்வாளா? அவளும் தன் மீது உயிராக தானே இருக்கிறாள்? அதெல்லாம் நடிப்பா?’ சந்தேகக் கோடு விழுந்த மனசு சஞ்சலப்பட்டது.

கோவையில் ‘பிசினஸ் மேக்னெட்’ என்று பிரபலமாக இருந்த குமார், ஏற்றுமதி – இறக்குமதி தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் உள்ளவன்.

அவனுடைய மனைவி லதா பேரழகி. குமாரும், லதா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். காலையில் எழுந்ததில் இருந்து அலுவலகம் செல்லும் வரை ‘லதா, லதா,’ என நூறு தடவை கூப்பிட்டுக் கொண்டிருப்பான். அவனது தேவைகளை லதாதான் செய்ய வேண்டும்.

உள்ளூரில் இருக்கும்போது தான் இப்படி. வெளியூருக்கு வேலையாகப் போய் விட்டால் வீட்டு நினைவே இருக்காது அவனுக்கு. ஊர் திரும்ப ரயில் அல்லது விமானத்தில் உட்கார்ந்த பிறகுதான் வீடு, மனைவி, குழந்தையின் நினைவு வரும்.

வீட்டிற்கு வந்து விட்டால் பழையபடி லதாவைச் சுற்றிச் சுற்றி வருவான். தன் மகள் திவ்யாவைக் கொஞ்சி மகிழ்வான்.

ஐந்து வயது குழந்தைக்கு தாயான பின்னரும் கூட இளமை குலையாது, அழகு குறையாது கட்டுடலாக இருந்தபடியால் ஆடவரது பார்வை லதாவை விட்டகல மறுக்கும்.

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிது. தனக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி, மேலும் முன்னேறுவதற்காகத் தானே வெளிநாடு சென்றோம். இக்கடித்தில் உள்ளது உண்மை எனில்… நினைவே கசந்தது குமாருக்கு.

கல்லூரியில் படிக்கும் பொழுது தனக்கு வந்த காதல் கடிதங்களை பற்றி லதா கூறி இருந்ததை நினைத்துப் பார்த்தான். தான் இல்லாத நேரம் வேறு யாராவது வருகிறார்களோ என்று சந்தோகம் பிறந்தது.

மனைவியின் அன்பை மறந்தான். அந்த மொட்டைக் கடிதம் அவனைக் குழப்பியது.

வழக்கமாக ‘லதா… லதா…’ என்று கூப்பிட்டுக் கொண்டே வருபவன் மவுனமாக வருவதைக் கண்ட லதா அந்த வித்திசாயத்தை உணர்ந்து, அவனருகே வந்தாள்.

“அப்பா…” ஆசையுடன் ஓடிவந்த திவ்யாவைக் கூட கவனிக்காமல் நேராக படுக்கை அறைக்கு சென்று படுத்தவனை பின் தொடர்ந்தாள் லதா.

“என்னங்க! உடம்பு சரியில்லையா? ஏன் டல்லா இருக்கீங்க?”

“ஆமா, தலை வலிக்குது,” அவளை திரும்பிக் கூட பார்க்காமல் பேசினான்.

தலைவலி தைலத்தை எடுத்து வந்து அவனது நெற்றியில் தடவுவதற்காக நெருங்கிய லதாவை அலட்சியப்படுத்தி திரும்பிப் படுத்துக் கொண்டான்.

தலைவலி என்றால் தன் மடியில் படுத்துக் கிடக்க விரும்பும் குமாரின் செய்கை அவளைக் கலக்கியது.

அப்போது தொலைபேசி ஒலித்தது-

அவனுடைய அமைதி கெட்டு விடக் கூடாதே என்ற எண்ணத்தில் வேகமாகச் சென்று ரிசீவரை எடுத்தாள். மறுமுனையில் வேறு எண்களைக் கேட்டதும் ‘ராங்க் நம்பர்’ எனக்கூறி, வைத்துவிட்டு படுக்கையறைக்குள் வந்தாள்.

“போனை எடுக்க ஏன் ஓடினாய்?” அதுவரை மவுனமாக இருந்த குமார் கேட்டான்.

“நீங்க தலைவலின்று படுத்திருந்தீங்க. அதான் வேகமா போனேன்.”

“யார் பேசினா?”

“ராங்க் நம்பர்ங்க.”

‘வெளியூர் போக இருந்ததால் அவளுடைய நண்பனை வரச்சொல்லி இருப்பாளோ? அவன்தான் போன் செய்திருப்பானோ?’ சந்தேகம் குமாரின் நெஞ்சை துளைத்தது.

‘மறுபடி போன் வந்தால், தான் சென்று எடுக்க வேண்டும்’ என தீர்மானித்தான். சிறிது நேரத்தில் மறுபடி தொலைபேசி ஒலித்தது.

லதாவை முந்திக் கொண்டு அவனே போய் எடுத்துப் பேசினான்.

“ஹலோ…”

இவனது குரல் கேட்டதும் மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சந்தேகம் மேலும் வலுத்தது.

குமாரின் உள்நோக்கம் ஏதும் அறியாத லதா அவனருகில் வந்து அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு உறங்கிப் போனாள்.

அவளுடைய கைகளை விடுவித்துக் கொண்டு, ஏதேதோ சிந்தனைகளில் நிம்மதி இழந்தான் குமார்.

காலையில், காபியுடன் தன்னை எழுப்பியவளை வெறுப்பாய் பார்த்தான்.

“தலைவலி குறைஞ்சிருக்காங்க?” கனிவுடன் கேட்டாள் லதா.

“ம்… ம்…”

அலுவலகம் செல்லும் வரை எதுவுமே பேசாமல், அவன் புறப்பட்டது லதாவிற்கு மிகுந்த வேதனை அளித்தது. எதுவும் புரியாமல் தவித்தாள்.

“திவ்யா, வா உன்னை ஸ்கூலில் கொண்டு விடறேன்.”

“வரேன்ப்பா. அம்மா டாட்டா.”

போகும் வழியில் திவ்யாவிடம் பேச்சை ஆரம்பித்தான் குமார்.

“திவ்யா கண்ணு நல்லா படிக்கிறியாம்மா?”

“ஓ நான்தாம்ப்பா பார்ஸ்ட்.”

“வெரிகுட். நீ நல்லா படிச்சாதான் அப்பாவுக்கு பிடிக்கும். நான் இப்ப கேக்கறதுக்கெல்லாம் கரெக்டா பதில் சொல்லுவியாம், என்னம்மா?”

“சரிப்பா.”

“நான் ஊருக்கு போயிருக்கும்போது வீட்டுக்கு யார் யார் வருவாங்க?”

“தாத்தா, பாட்டிதான் எப்பவாவது வருவாங்க.”

“வேற யாராவது வருவாங்களா?”
“யாரும் வரமாட்டாங்கப்பா.”

“அம்மா யார் கூடயாவது போன்ல பேசுவாங்களா?”

“எப்பவாச்சும் அம்மாவோட பிரெண்ட்ஸ் பேசுவாங்க.”

“அவங்களோட பேர் உனக்கு தெரியுமா?”

“தெரியாதுப்பா.”

“ராத்திரி நேரத்துல நம்ம வீட்டுக்கு யாராவது வருவாங்களா?”

“தெரியாதுப்பா. நான் சீக்கிரமா தூங்கிடுவேன். அம்மாதான் முழிச்சிக்கிட்டிருப்பாங்க.”

“இதெல்லாம் நான் கேட்டேன்னு அம்மாகிட்டே சொல்லவே கூடாது. சொன்னீனா அப்பா உன் கூட பேசவே மாட்டேன். சரியா?”

“சரிப்பா.”

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel