Lekha Books

A+ A A-

இரவின் முடிவு - Page 2

Iravin Mudivu

"நல்ல ஒரு தடிமனான ஆளா என்னை மாத்திடுவே. அப்படித்தானே?"

"இல்ல... இல்ல... நிச்சயமா உங்களை நான் தடிமனான ஆளா மாத்த மாட்டேன். எனக்குப் பொதுவா தடிமனான ஆளுங்களைக் கண்டாலே பிடிக்காது. நான் உங்களோட நோய்கள் அத்தனையும் சரிப்படுத்தி உங்களைப் பழைய மாதிரி ஆக்கப் போறேன். நான் இங்கே வந்திருக்கிறதே அதற்காகத்தான்..."

அவர் பெருமூச்சு விட்டவாறு சொன்னார் :

"முன்பு இருந்ததைப் போல..."

அவள் சொன்னாள் :

"ஆமா... முன்பு இருந்ததைப் போலத்தான்..."

அதற்குப் பிறகு இரண்டு பேருமே எதுவும் பேசாமல் மௌனமாகி விட்டார்கள்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு அந்தப் பெண் சொன்னாள் :

"உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அன்னைக்கு நீங்க தற்கொலை செய்யணும்னு புறப்பட்டுக்கிட்டு இருந்தீங்க..."

"ம்...' என்று அவர் தலையை ஆட்டியபோது அந்தப் பெண் தொடர்ந்து சொன்னாள் :

"நான்தான் உங்களை அதைச் செய்ய விடாம தடுத்து நிறுத்தினேன்..."

அவர் மெதுவான குரலில் சொன்னார் :

"ஞாபகத்துல இருக்கு... ஞாபகத்துல இருக்கு..."

அவள் சொன்னாள் :

"ஆனா, நான் அன்னைக்கு நீங்க தற்கொலை பண்ணிக்க வேண்டாம்னு ஒண்ணும் சொல்லல. தற்கொலை செய்யப் போறேன்னு நீங்களும் என்கிட்ட சொல்லல. ஆனா, எனக்கு அது தெரியும். அதனால ஒண்ணும் சொல்லாமலே நான்.. என் அன்பால மட்டும்..."

அவர் அவளைத் தடுத்தார்.

"வேண்டாம். இதற்கு மேல் ஒண்ணுமே சொல்ல வேண்டாம். எல்லாம் என்னோட ஞாபகத்துல இருக்கு..."

பெண் கவலையுடன் சொன்னாள் :

"சொல்லாம எப்படி இருக்க முடியும்? நீங்க இப்போ செய்றது கூட ஒரு வகையில தற்கொலை மாதிரி தானே! யாரையும் பார்க்காம எங்கேயும் போகாம... உங்களுக்கு நீங்களே ஒரு சிறு உலகத்தை அமைச்சிக்கிட்டு... இந்த இருட்டுக்குள்ளே முடங்கிக்கிட்டு... இது தேவையா? யாருக்காக இது? இப்படி இருக்குறதால என்ன பிரயோஜனம்? நீங்க உருப்படியா சொல்ற மாதிரி காரியங்கள் செய்து எத்தனை வருடங்களாச்சு! நான் இதையெல்லாம் புரிஞ்சுக்காம இல்ல. அதனாலதான் சொல்றேன்..."

அவர் ஒன்றுமே பேசாமல் மௌனமாக நிற்கவே, அவள் தொடர்ந்தாள் :

"இங்கே ஒரு இளம் பெண் வந்துக்கிட்டு இருந்தாள்ல? சில நேரங்கள்ல உங்களுக்குச் சாப்பாடு எடுத்துக்கிட்டு... நல்ல அழகான ஒரு இளம்பெண்! நீங்க அவளை மகளைப் போல அன்பு செலுத்தி வச்சிருந்தீங்க..."

அவர் சொன்னார்:

"என் அக்கா மகளோட மகள். அவ எனக்கு எல்லாமாக இருந்தா. நான் மகளைப் போல அவ மேல அன்பு வச்சிருந்தேன்..."

அவர் திடீர்ரென்று தான் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தினார். பிறகு தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் போல மெதுவான குரலில் சொன்னார்.

"எதற்கு 'போல'ன்னு நான் சொல்லணும்? அவ எனக்கு மகள்தானே! அவ போன பிறகுதானே நான் தன்னந்தனியான ஒரு ஆளா ஆயிட்டேன் ! அதற்குப் பிறகு... எனக்குன்னு... யாருமே இல்லாம..."

அந்தப் பெண் ஆறுதல் கூறும் வகையில் சொன்னாள் :

"அப்படிச் சொல்லக் கூடாது. அப்படி நீங்க சொல்றதை நான் ஒத்துக்கவே மாட்டேன். யாருமே இல்லைன்னு சொன்னா எப்படி? நீங்க அப்படி நினைக்கிறீங்க... உங்க மனசுல அப்படித் தோணுது. உங்க மருமகளோட பொண்ணு. அவளுக்குத் திருமணம் ஆயிட்டா, அவ தன் புருஷன்கூட போக வேண்டாமா? இங்கேயே தங்கி உங்க விஷயங்களைப் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா?"

அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க அவள் தொடர்ந்தாள் :

"உங்களுக்குத்தான் எப்பவும் நான் இருக்கேன்ல? என்னைத் தவிர, வேற எவ்வளவு பேர் இருக்காங்க! இளைஞர்களும், வயதானவர்களும்... ஆனா, நீங்க எல்லாரிடமிருந்தும் விலகி நின்னுக்கிட்டு இருந்தா... உங்களுக்கு எப்போ பார்த்தாலும் மனசுல சந்தேகம்... நான் சொல்றது சரிதானா?"

அவர் ஒன்றும் பேசவில்லை.

வெளியே வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண் அவரின் கைகளைப் பிடித்தவாறு சொன்னாள்.

"சரி... போகட்டும். அதெல்லாம் முடிஞ்சு போன விஷயங்கள். அதைப் பற்றி இப்போ நினைக்காம இருந்தாலே நல்லது. இப்போ நாம..."

அந்தப் பெண் என்ன சொல்லப் போகிறாள் என்ற ஆவலுடன் அவள் முகத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தார் அவர்.

பெண் தொடர்ந்தாள்:

"இங்கே பாருங்க... இருக்குறதே கொஞ்ச நேரம்தான். கொஞ்ச நேரத்திற்காவது நாம இருண்டு போய் கிடக்குற இந்தக் குகையை விட்டு வெளியேறி... வெளிச்சமும், பிரகாசமும் இருக்குற ஏதாவதொரு இடத்திற்குப் போய்... எங்கேயாவது..."

அவர் கேட்டார்.

"ரொம்ப... ரொம்பவும் தூரத்துல போக உனக்குப் பிடிக்குமா?"

அந்தப் பெண் சிரித்தவாறு சொன்னாள் :

"நீங்க என் கூட இருந்தா... எவ்வளவு தூரத்துல இருந்தா என்ன?"

அவர்கள் இருவரும் குளக்கரையில் இருந்த ஒரு ரெஸ்ட்டாரெண்டில் அமர்ந்திருந்தார்கள். ரெஸ்ட்டாரெண்ட் என்றால்... ரெஸ்ட்டாரெண்ட் முன் இருந்த அழகான ஒரு நடைபாதையில் என்று அர்த்தம்... நடைபாதையை ஒட்டி இருந்தது அந்தக் குளம். குளத்தில் இருந்த நீரில் கருப்பும் வெள்ளையுமாக மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. குளத்தின் கரையில் இருந்த மரங்களின் இலைகளில் மாலைநேர சூரியனின் மஞ்சள் வெளிச்சம் பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அவர் உற்சாக மிகுதியில் இருந்தார்.

அவளும்தான்.

அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பழைய பாடலை அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

"ஜரா, தீரே, தீரே..."

அந்தப் பெண் ஆர்வத்துடன் கேட்டாள் :

"இது யாரோட பாடல்?"

அவர் உணர்ச்சி பொங்கக் கூறினார் :

"பீகம் அக்தர்... பீகம் அக்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா?"

அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

அவர் அவளுக்கு பீகம் அக்தரைப் பற்றி சொன்னார்.

பெண் மீண்டும் கேட்டாள் :

"பாட்டுல முன்னாடி இருந்த மாதிரி இப்பவும் உங்களுக்கு ஆர்வம் உண்டா?"

அவர் சொன்னார் :

"நிச்சயமா..."

என்னவோ சிந்தித்த அவர் மீண்டும் சொன்னார் :

"ஒரு வேளை இதுவும் இல்லைன்னா"

அவள் சொன்னாள்.

"இல்ல... இல்ல... அப்படி ஒரு போதும் நடக்கவே நடக்காது..."

அவர் மீண்டும் பீகம் அக்தரின் வரிகளை முணுமுணுக்க ஆரம்பித்தார்.

பிறகு... தான் பாடிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து கேட்டார் :

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel