Lekha Books

A+ A A-

டிபார்ச்சர்ஸ் - Page 3

Departures

மாதங்கள் கடந்தோடுகின்றன. ஒரு நாள் மிகா திரும்பி வருகிறாள். அவள் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறாள். பிறக்கப் போகும் தங்களின் மகன் தலையை நிமிர்த்தி பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் நல்ல ஒரு வேலையில் வெகு சீக்கிரம் சேரும்படி தன் கணவன் டைகோவை அவள் கேட்டுக் கொள்கிறாள். அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சூழ்நிலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பொது குளியலறையின் உரிமையாளரான திருமதி. Yamashita மரணமடைந்து விட்டதாக கூறுகிறார்கள். அவளும் மிகாவும் நெருக்கமான சினேகிதிகள். திருமதி. Yamashitaவின் குடும்பத்து உறுப்பினர்களுக்கு முன்பும், தன் மனைவி மிகாவிற்கு முன்பும் டைகோ தன் சடங்குகளைச் செய்கிறான்.

திருமதி. Yamashitaவின் இறந்த உடலைக் கொண்டு வந்து வீட்டிற்கு முன்னால் இருக்கச் செய்து, அதை மணிக்கணக்காக அலங்கரிக்கிறான் டைகோ. அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் அங்கு கூடியிருந்த அனைவரும் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னையே முழுமையாக மறந்து விட்டு, நூறு சதவிகித அர்ப்பணிப்பு உணர்வுடன் பிணத்தை அழகுபடுத்தி, அலங்கரிக்கும் தன் கணவனையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் மிகா.

அப்போதுதான் அவளுக்கே தெரிகிறது- தன் கணவனைப் பற்றி எவ்வளவு சாதாரணமாக தான் இதுவரை நினைத்திருக்கிறோம் என்று. 'எவ்வளவு அருமையான ஒரு கலைஞனை நாம் மிகவும் தரக் குறைவாக நினைத்து விட்டோம்!' என்று அவள் தன் மனதிற்குள் நினைக்கிறாள். யாரிடமும் இல்லாத ஒரு தனித் திறமை தன் கணவனிடம் இருப்பதை நினைத்து அவள் பெருமை கொள்கிறாள். உயிரற்ற ஒரு பிணத்தை ஒரு மணப் பெண்ணுக்கு நிகராக அலங்காரம் செய்து, இறுதி பயணத்திற்கு ஆயத்தம் செய்யும் தன் அருமைக் கணவனின் அபார திறமையைப் பார்த்து அவள் ஆச்சரியப்படுகிறாள். அங்கு இருந்த எல்லோரும் டைகோவின் கலைத் திறமையை மனம் திறந்து பாராட்டுகிறார்கள். இன்னொரு வேலையைத் தேடும்படி தன் கணவனிடம் இனிமேல் கூறக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானிக்கிறாள் மிகா.

ஒருநாள் இன்னொரு அதிர்ச்சியான செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. எங்கோ வேறொரு பெண்ணுடன் பல வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிப் போன டைகோவின் தந்தை இறந்த செய்திதான் அது. தன் மனைவி மிகாவுடன், டைகோ தன் தந்தையின் இறந்த உடலைப் பார்ப்பதற்காக அந்த இன்னொரு கிராமத்திற்குச் செல்கிறான். ஆரம்பத்தில் தன் தந்தையின் பிணத்தைப் பார்த்து அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த 'பிண அடக்கம் செய்யும் பணியாட்கள்' அந்த ஏழை மனிதனின் பிணத்தை மிகவும் அலட்சியப்படுத்துவதைப் பார்த்து அவன் அதிர்ச்சியடைகிறான். சிறு வயதில் தன்னையும், தன் அன்பு அன்னையையும் அனாதையாக தவிக்க விட்டு விட்டு ஓடிய மனிதர்தானே என்று ஆரம்பத்தில் வெறுப்புடன் நினைக்கும் அவன், தன் வழக்கமான கடமையைச் செய்வது என்று முடிவு செய்கிறான்.

அந்த பிணத்தை வெள்ளை நிற துணியைக் கொண்டு வந்து போர்த்துகிறான். பின்னர் அலங்கரிக்க ஆரம்பிக்கிறான். அப்போது அவனுடைய தந்தையின் உள்ளங்கையில் ஏதோ இருப்பதை அவன் பார்க்கிறான். என்ன என்று பார்த்தால் - சிறு வயதில் அவன் தன் தந்தையிடம் கொடுத்த 'ஏதோ எழுதப்பட்ட கல்.' அந்தச் சடங்குகளைச் செய்யச் செய்ய, தன் தந்தை சிறுவனாக இருந்த தன்னிடம் அன்பாக நடந்து கொண்டது, தன்னைக் கொஞ்சியது, தனக்கு கதைகள் கூறியது என்று ஒவ்வொன்றும் அவனுடைய ஞாபகத்தில் வருகின்றன. டைகோ மெதுவாக அந்த 'எழுதப்பட்ட கல்'லை தன் மனைவி மிகாவின் வீங்கிய வயிற்றின் மீது வைத்து தடவுகிறான்.

அத்துடன் படம் முடிவடைகிறது.

'எந்த வேலையும் தாழ்வானது அல்ல. அனைத்துமே உயர்ந்தவைதாம்... புனிதமானவைதாம். பலரையும் சந்தோஷம் கொள்ளச் செய்வதுதான்' என்ற அருமையான செய்தியைக் கூறும் இப்படத்தில் Daigoவாக நடித்திருக்கும் Masahiro Motoki, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். Mikaவாக நடித்திருக்கும் Ryoko Hirosueவும்தான்.

முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையைக் கையாண்டதற்காகவும், அதை விட்டு சிறிது கூட விலகாமல், படத்தை இயக்கியதற்காகவும் இயக்குநர் Yojiro Takitaவிற்கு - ஒரு பூச்செண்டு!

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel