Lekha Books

A+ A A-

வளர்ப்பு மகள் - Page 3

valarppu magal

நான் என்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டேன். தான் வளர்ந்து ஒரு இளம் பெண்ணாக மாறியிருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியாது.

4. இல்லை. நான் அதை எந்தக் காரணம் கொண்டும் செய்ய மாட்டேன். அவள் என்னுடைய மகள்தான். பாவச் செயல்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

5. அவள் ஒரு பட்டாம்பூச்சியைப் போல பூந்தோட்டத்திற்குள் ஓடி மலர்களைச் சேகரித்து மடியில் அவற்றை வைத்துக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து நான் மனதில் மகிழ்ச்சியடைந்தேன்.

6. நான் மிகவும் வருத்தப்பட்டேன். இந்தக் குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன்மைக்குள் புகுந்து ஆக்கிரமிக்க அல்லவா நான் திட்டமிட்டிருந்தேன்? எவ்வளவு பெரிய பாவச் செயல் அது?

8. நள்ளிரவு நேரத்தில் நான் ஒரு கனவு கண்டேன். அந்த மோசமான கனவு என்னை ஒருவித குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. பழைய கெட்ட எண்ணங்கள் என்னுடைய இதயத்திற்குள் மீண்டும் வலம் வர ஆரம்பித்தன. அந்தக் கனவில் கண்ட சுகத்தை நான் நேரடியாக அனுபவிக்க வேண்டும். இந்தக் கெட்ட சிந்தனைகளைக் கட்டுப்படுத்த என்னுடைய அப்பாவி இதயத்தால் முடியவில்லை. அவை உயர்ந்தெழுந்து என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்தது.

9. அந்தச் செயலைச் செய்வது என்று நான் முடிவெடுத்தேன். நான் செய்த எத்தனையோ பாவச் செயல்களுடன் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே!

10. நள்ளிரவு நேரம் ஆன போது நான் அவளுடைய அறைக்குள் மெதுவாக நுழைந்தேன். கட்டில் மீது விரிக்கப்பட்டிருந்த கனமான மெத்தையில் வெள்ளை நிறப் பட்டுத் துணியால் செய்யப்பட்ட தலையணையில் கையை மடக்கி வைத்தவாறு அவள் சரிந்து படுத்திருந்தாள். அறையில் புழுக்கம் இருப்பதாக அவள் உணர்ந்திருக்க வேண்டும். ஒரு மெல்லிய துவாலையை மட்டுமே அவள் தன் உடம்பில் கட்டியிருந்தாள். அவள் அணிந்திருந்த முண்டும் ப்ளவ்ஸும் மெத்தையின் தலைப் பகுதியில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. ஜன்னல் வழியாக நிலவு அவள் முகத்திலும் மார்பிலும் பவுடர் இட்டுக் கொண்டிருந்தது. அடடா! எப்படிப்பட்ட காட்சி! இது வரை அவளை ஒரு குழந்தை என்று நினைத்திருந்த நான் உண்மையிலேயே மிகப் பெரிய முட்டாள்தான். அவளுடைய மார்புகள் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருந்தன. அவள் ஒரு முழுமையான இளம் பெண்ணாக மாறியிருந்தாள்... என்னால் அதற்குமேல் தாங்க முடியவில்லை... நான் படுக்கையில் சரிந்து படுத்தவாறு அவளை மெதுவாகத் தடவினேன். அவள் திடுக்கிட்டு கண் விழித்து பாதி தூக்கத்தில் "அப்பா" என்று அழைத்தவாறு மெத்தையைவிட்டு எழ முயற்சித்தாள். "கண்ணு, பயப்படாதே. நான் தான்..."என்று ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தவாறு மெல்லிய குரலில் நான் சொன்னேன். அவள் தன்னுடைய ப்ளவ்ஸை படுக்கையில் தேடியவாறு "அப்பா... இப்போ இங்கே எதுக்கு வந்தீங்க?" என்று கேட்டாள். நான் அதற்கு பதிலொன்றும் கூறவில்லை. அவள் உடம்பு மீது கொண்ட ஆவேசம் என்னை அதிகமாக ஆக்கிரமிக்க, நான் அவளை இறுக அணைத்தேன். அவள் என்னைப் பார்த்து பயப்பட்டாள். "அப்பா... என்னைக் கொன்னுடாதீங்க அப்பா..." என்று என்னைப் பார்த்து கெஞ்சினாள். காமப்பெருங்கடலில் மூழ்கி இறக்கப்போகிற நான் அதிலிருந்து தப்பிப்பதற்காக அவளை இறுகக் கட்டிப் பிடித்தேன்.

அவள் ஒரு புள்ளிமானைப் போல கண்ணீர் வழிய தேம்பித் தேம்பி அழுதவாறு என்னையே பார்த்தாள். அந்தப் பார்வை தளர்ந்து குளிர்ந்து போயிருந்த என்னுடைய நரம்புகளில் நெருப்பு பிடிக்கச் செய்தது. நான் ஒரு கொலைகாரனைப் போல ஓடிப்போய் என்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து தாழிட்டேன்... மிகப் பெரிய ஏமாற்றம்! வெறுப்பு! விரக்தி! அந்த சுடுகாட்டு நெருப்பு பற்றி எரிந்து அடங்கியது. ஆனால் பரிதாபமான நிலையில் இருந்த என்மீது அந்தச் சுடுகாட்டின் சாம்பல் பறந்து வந்து என் கண்களை மூடியது. என் இதயத்தில் கிடந்த அந்தக் காமத்தின் பிணத்தை கொடூர எண்ணங்களான கழுகுகள் இதய நரம்புகளுடன் கொத்திப் பிடுங்கின. எனக்கு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது. என் உடம்பின் சதைகள் ஒவ்வொன்றும் பிய்ந்து கீழே விழுவதைப் போல் நான் உணர்ந்தேன். என் இரத்தக் குழாய்களில் ஓடிக் கொண்டிருப்பது குளிர்ந்து நாறிப்போன அழுக்கு நீராகத்தான் இருக்கும் என்பதைப் போல் நான் உணர்ந்தேன். ஹா! அந்தச் சம்பவத்தைப் பற்றிய சிந்தனை உஷ்ணமான ஆவி வெளியேறிக் கொண்டிருக்கும் ஆயிரம் டன் எடை கொண்ட ஒரு நீராவி உருளையைப் போல என் இதயத்தில் இங்குமங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது. நாளை அதிகாலையில் அவள் முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்? என் பெண்ணின் முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்? "மோசமான மனிதனே, நீ என்ன செஞ்சே?" என்று என்னுடைய மனசாட்சியின் ஆழத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. எனக்கு உடனே சாகவேண்டும் போல் இருந்தது. நான் மேஜையைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்தேன். ஆனால், வாழ வேண்டும் என்ற மிருகத்தனமான ஒரு ஆசை மீண்டும் என்னை வந்து ஆக்கிரமித்தது... ஒரு மணி நேரம் சென்றது.

எதற்கு என்று எனக்கே தெரியவில்லை- ஒரு பைத்தியக்காரனைப் போல அவளுடைய அறைக்குள் நான் மீண்டும் நுழைந்தேன். படுக்கையின் தலைப் பகுதியில் ஒரு அணில் குஞ்சைப் போல அவள் தன்னைச் சுருக்கிக் கொண்டு பயந்து நடுங்கியவாறு உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் எங்கே கத்தி விடுவாளோ என்று எனக்குத் தோன்றியது. அவளின் வாயை நான் கையால் பொத்தினேன்... தொடர்ந்து அவளின் முண்டை எடுத்து அவளுடைய கழுத்தில் சுற்றி அதை முறுக்கியவாறு நான் மெதுவான குரலில் முணுமுணுத்தேன். "சாகுடி... சாகு... உன் முகத்தை இனிமேல் பார்த்தா நிச்சயம் நான் பைத்தியமாயிடுவேன்." அவள் இப்படியும் அப்படியுமாகத் திமிறினாள்... நெளிந்தாள்... கண்கள் நிலைகுத்தி நின்றன. நாக்கு வெளியே வந்தது... என்ன காரணத்தாலோ என்னிடம் எந்தவித உணர்ச்சியும் உண்டாகவில்லை... ஒரு கோழிக்குஞ்சை கழுத்தை நெரித்துக் கொல்வதைப் போல நான் அவளைக் கொன்றேன். 

ஒரு வயதான கசாப்புக் கடைக்காரனைப் போல அவள் துடிதுடித்து இறந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த இறந்துபோன உடலை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு நான் என்னுடைய அறைக்குள் நுழைந்து படுக்கையில் போய் விழுந்தேன். போர்வையை எடுத்து மூடிப் படுத்தேன். மனதில் இனம்புரியாத ஒரு அமைதி நிலவிக்கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. ஆனால், அது ஒரு வகை மயான அமைதி என்பதுதான் உண்மை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel