
“சரி... நீ கொஞ்சம் சிந்திச்சுப் பார்... உலகத்திலேயே மிகவும் மோசமான காரியம் எனக்கு நடந்திருச்சு. நான்கு மாதங்கள் எல்லாம் நல்ல முறையில் நடந்தது. எல்லாம் ஒழுங்கா போய்க் கொண்டிருக்குதுன்னு நினைச்சு சந்தோஷமா இருக்குறப்போ அந்த அடி வந்து விழுகுது.
என் வழக்கமான காதலியை வழக்கமான நேரத்தில், மதியம் ஒண்ணே கால் மணிக்கு எதிர் பார்த்துக் கொண்டு, ஒரு சுருட்டைப் புகைத்துக் கொண்டு, கனவு கண்டு கொண்டு இருக்குறபோது தான் வழக்கமான நேரம் கடந்து போயிருப்பதையே நான் உணர்றேன். அவள் மிகவும் சரியா நடந்து கொள்கிறவள் என்பதால் நான் பதைபதைப்பு அடைய ஆரம்பிச்சுட்டேன். ஆனால், ஏதாவது ஒரு விஷயம் அவளைத் தடை செய்திருக்கும் என்று நான் நினைத்தேன். அரை மணிநேரம் தாண்டியது. ஒரு மணி நேரம் கடந்தது. ஒன்றரை மணி நேரம் ஆனது. அப்படின்னா உண்மையாகவே அவளுக்கு ஏதோ தடை உண்டாகியிருக்குன்னு நான் நினைச்சேன்... கடுமையான தலைவலியோ... தொந்தரவு தரும் ஏதாவது விருந்தாளியோ... அந்த மாதிரியான காத்திருத்தல் வெறுப்பபையும் சோர்வையும் கோபத்தையும் உண்டாக்கக்கூடிய ஒன்று என்பதே உண்மை. இறுதியில் வெளியே செல்லலாம் என்று நான் தீர்மானிச்சேன். நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். அவள் அப்போது ஒரு புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். ‘அது சரி...’ - நான் அவளிடம் சொன்னேன். அவள் அதற்கு அமைதியான குரலில் பதில் சொன்னாள்:
‘என் தங்கமே, என்னால் வர முடியவில்லை. ஒரு தடை உண்டாகிவிட்டது.’
“என்ன தடை?”
‘ஒரு காரியம் நடந்திடுச்சு.’
‘என்ன அது?’
‘ஒரு தொல்லை கொடுப்பவன் பார்க்க வந்துட்டான்.’
அவள் உண்மையான காரணத்தைச் சொல்ல மாட்டாள் என்று எனக்குத் தெரியும். அவள் அமைதியாக இருந்தாள். அதைப்பற்றி நினைத்து நான் கவலைப்படல. மறுநாள் இன்னொரு காதலியுடன் சேர்ந்து இருந்து இழந்த நேரத்தைத் திரும்பப் பெற்று விடலாம் என்று நான் நினைத்தேன். செவ்வாய்க் கிழமை. அந்த அதிகாரியின் மனைவியைப் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் ஆர்வத்துடனும் காம எண்ணங்களுடனும் நான் இருந்தேன். ஆனால், அவளும் நிச்சியக்கப்பட்ட நேரத்திற்கு வந்து சேரவில்லை என்ற விஷயம் தெரிந்தபோது, நான் ஒரு மாதிரி ஆகி விட்டேன். நான் கடிகாரத்தை பதைபதைப்புடன் பார்த்தேன். கடிகாரத்தின் முள் முன்னோக்கி நகர்ந்து கொண்ருப்பதாக பொறுமை இல்லாமல் நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அரை மணி நேரம் கடந்தது. இரண்டு மணி ஆனது. என்னால் அங்கு உட்கார்ந்திருக்க முடியல. நான் அறையில் அங்குமிங்குமாக நடந்தேன். அவள் வருவதை எதிர்பார்த்து சாளரத்தில் முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளியே பார்த்தவாறு நின்றிருந்தேன். அவள் படிகளில் ஏறி வரும் சத்தத்தைக் கேட்பதற்காக நான் அறையின் வாசலில் காதுகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டு நின்றிருந்தேன்.
மணி இரண்டரையும் கடந்து மூன்று ஆனது! நான் என்னுடைய தொப்பியை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். என் நண்பனே, அவளும் ஒரு புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.
‘அது சரி... இதுதானா விஷயம்...’ - நான் சொன்னேன்.
எந்தவிதமான உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல் அவள் சொன்னாள் : ‘தடை காரணமா என்னால் வர முடியாமல் போய் விட்டது.’
‘என்ன தடை..?’
‘ஒரு தொல்லை தரும் மனிதன் வந்துட்டான்.’
உண்மையிலேயே அவர்கள் இருவருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்து போய்விட்டனவோ என்று எனக்கு சந்தேகம் உண்டானது. ஆனால், அவளிடம் எந்தவித அதிர்ச்சியும் இல்லை. நான் என்னுடைய சந்தேகங்களை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்தேன். அது முற்றிலும் இயற்கையாகவே நடந்திருக்கிறது என்று நான் முடிவெடுத்திருந்தேன். அவள் பக்கம் எந்தவொரு திருட்டுத் தனமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அரைமணி நேரம் நட்புடன் பேசிக் கொண்டிருந்த பிறகு (அவளுடைய மகள் உள்ளே வந்ததால், கிட்டத்தட்ட பன்னிரண்டு தடவைகள் அதற்குத் தடை உண்டாகியிருக்கிறது) மிகுந்த கவலையுடன் நான் வெளியே நடந்தேன். அடுத்த நாள் நடந்த விஷயத்தைச் சிந்திச்சுப் பாரு.”
“அதேதான் நடந்ததா?”
“ஆமாம்... அடுத்த நாளும் அதேதான் நடந்தது. எந்தவொரு விளக்கமும் இல்லாமல் மூன்று வாரங்கள் அதேதான் தொடர்ந்து நடந்தது. அந்த வழக்கத்திற்கு மாறான செயலோ, நான் சந்தேகப்பட்ட ரகசியமோ எந்தவொரு விளக்கத்தையும் எனக்குத் தரவில்லை.”
“அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சா?”
“நான் அப்படி நினைக்க வேண்டியதிருக்கு! எப்படி? அதைக் கண்டுபிடிப்பது வரை எனக்கு ஒரே பரபரப்பா இருந்தது.”
“இறுதியில் நீ எப்படி அதைக் கண்டுபிடிச்சே?”
“அவர்களுடைய கடிதங்களில் இருந்து... ஒரே நாளில் ஒரே மாதிரியான காரணங்களைச் சொல்லி அவர்கள் என்னை வெறுத்து ஒதுக்கினாங்க.”
“அப்படியா?”
“அது இப்படித்தான் நடந்தது. பெண்கள் நிறைய பின்களை பயன்படுத்திகிறவர்கள் என்ற விஷயம் உனக்குத் தெரியும்ல! எனக்கு ஹேர்பின்களை மட்டும் தான் தெரியும். அவற்றின்மீது எனக்கு சந்தேகம் இருந்ததால், நான் அவற்றை கவனிக்கிறேன். ஆனால் மற்ற பின்கள் இருக்கின்றனவே! அவை மிகவும் ஆபத்தானவை. கருப்பு நிறத்தில் தலையைக் கொண்டிருக்கும், பிரச்சினைகளுடன் ஒரே மாதிரி நம்மையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பின்கள்.... நாம் நாயையும் குதிரையையும் வேறுபடுத்தித் தெரிந்து கொள்வதைப்போல, அந்த பின்கள் நாம் முட்டாள்கள் என்பதைத் தெரிந்து கொள்கின்றன. ஒருநாள் அந்த அலுவலக அதிகாரியின் மனைவி அந்தக் ‘கலைப்பொருளை’ என் கண்ணாடிக்கு அருகில் ஒரு தாளில் கட்டி வைத்தாள். ஆனால், என்னுடைய வழக்கமான காதலி அந்தக் கருப்பு நிறப் பொருளைப் பார்த்தவுடன், அதை எடுத்துக் தன் கையில் வைத்தாள். ஒரு வார்த்தைகூடக் கூறாமல், அவள் தன் கையில் இருந்த ஹேர் பின்கள் மாறுபட்டு இருந்தாலும், பார்க்கும் போது ஒரே மாதிரி தோன்றும் அந்தப் பின்களை... அதே இடத்தில் வைத்துவிட்டுப் போய் விட்டாள். மறுநாள் அதிகாரியின் மனைவி... அவள் தன் அறையில் மறந்து வைத்து விட்டுப் போன ‘பொருளை’ எடுப்பதற்காக வந்தபோது, அதற்கு பதிலாக வேறொன்று அங்கே இருப்பதை திடீரென்று அவள் பார்த்தாள். அப்போது அவளுக்கு சந்தேகம் வந்திடுச்சு. அவள் என் இன்னொரு காதலியைத் தேடினாள். என் வழக்கமான காதலி இந்தக் கம்பி இல்லா கம்பி செய்திக்கு பதிலாக மூன்று கருப்பு நிற ஹேர் பின்களை அனுப்பி வைத்தாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook