Lekha Books

A+ A A-
28 Jul

சரியாக தூக்கம் வரவில்லையா? அதற்கு என்ன பரிகாரம்?

சரியாக தூக்கம் வரவில்லையா?

அதற்கு என்ன பரிகாரம்?

- மகேஷ்வர்மா  

     ஒரு மனிதருக்கு சரியாக தூக்கம் வந்தால்தான், அவருக்கு நோய்கள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்காது. மனதில் நிம்மதி இருக்கும். ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியான கிரகம் விரய ஸ்தானத்தில் பாவ கிரகத்துடன் இருந்தால், அல்லது விரய ஸ்தானாதிபதி லக்னாதிபதியுடன் லக்னத்தில் இருந்தால், அவர்கள் அதிகமாக சிந்திப்பார்கள். லக்னாதிபதி, சூரியனுடன் லக்னத்தில் இருந்தால், அந்த ஜாதகத்தில் பித்தம் உண்டாகும். அந்த பித்தத்தினால் அவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். அதனால் அவர்களுக்கு சரியாக தூக்கம் வராது.

Read more: சரியாக தூக்கம் வரவில்லையா? அதற்கு என்ன பரிகாரம்?

28 Jul

குழந்தைகள் நன்கு படிப்பதற்கு, செய்ய வேண்டிய பரிகாரங்கள்

   குழந்தைகள் நன்கு படிப்பதற்கு,

செய்ய வேண்டிய பரிகாரங்கள்

- மகேஷ்வர்மா  

குழந்தைகள் நன்கு படிப்பதற்கு எந்தெந்த கிரகங்கள் உதவுகின்றன? என்ன பரிகாரம் செய்தால், நன்றாக படிப்பார்கள்?

     ஒரு குழந்தையின் ஜாதகத்தில் அந்த குழந்தை நன்கு படிப்பதற்கு, அந்த ஜாதகத்தில் புதன், குரு, சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். ஜாதகத்தில் புதன் லக்னாதிபதியாக இருந்து, உச்சமாக இருந்தால்,  அந்த குழந்தை நன்கு படிக்கும். பெயர், புகழுடன் வாழும், அந்த ஜாதகத்தில் குரு, அந்த புதனுக்கு கேந்திரமாக இருந்தால் அல்லது குரு, புதனைப் பார்த்தால், அந்த குழந்தை மேற்படிப்பு படிக்கும். ஆனால், அந்த ஜாதகத்தில் புதன் அஸ்தமாக இருந்தால் அல்லது புதன் நீச்சமாக இருந்தால், அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்த குழந்தையின் மேற்படிப்பில் பல சிரமங்கள் உண்டாகும். சில நேரங்களில் மேற்படிப்பிற்குச் செல்ல முடியாத சூழ்நிலை கூட உண்டாகும்.

Read more: குழந்தைகள் நன்கு படிப்பதற்கு, செய்ய வேண்டிய பரிகாரங்கள்

03 Jun

கோபம் ஏன் வருகிறது? அதை நீக்க என்ன வழி?

கோபம் ஏன் வருகிறது? அதை நீக்க என்ன வழி?

(மகேஷ் வர்மா)

ல மனிதர்களுக்கு அடக்க முடியாத அளவிற்கு கோபம் வருகிறது. இந்த கோப குணத்தால் பல பிரச்சினைகள்  உண்டாகின்றன. ஜோதிட ரீதியாக அதற்குக் காரணம் என்ன?

கோபம் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வருகிறது. கோபம் காரணமாக குடும்பத்தில் பிரச்சினைகள்  உண்டாகின்றன. அதனால் பலர் நல்ல வாய்ப்புக்களை இழந்து விடுகின்றனர். பலர் தங்களின் நல்ல நண்பர்களைக் கூட இழந்து விடுகின்றனர்.

Read more: கோபம் ஏன் வருகிறது? அதை நீக்க என்ன வழி?

03 Jun

கனவுகளால் தூக்கம் கெடுகிறதா? பரிகாரம் என்ன?

கனவுகளால் தூக்கம் கெடுகிறதா? பரிகாரம் என்ன?

(மகேஷ் வர்மா)

னவுகளால் தூக்கம் கெடுகிறது. கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன? ஜோதிட ரீதியாக அதற்கு காரணம் என்ன?

மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியம். ஆனால், பலர் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். கனவுகள் வந்து தூக்கத்தையே இல்லாமற் செய்து விடும். நீரில் மூழ்குவது, காட்டில் தனியாக நின்று கொண்டிருப்பது, படிக்கட்டில் நிற்பது, படியிலிருந்து கீழே இறங்குவது, சேற்றில் மாட்டிக் கொண்டிருப்பது, நிர்வாணமாக அலைந்து கொண்டிருப்பது, கப்பலில் இக்கட்டான சூழலில் சிக்கியிருப்பது – இப்படி எத்தனையோ கனவுகள்!

Read more: கனவுகளால் தூக்கம் கெடுகிறதா? பரிகாரம் என்ன?

31 May

உரிய வேலைகள் கிடைக்கவில்லையா? அதற்கான பரிகாரங்கள்

உரிய வேலைகள் கிடைக்கவில்லையா?
அதற்கான பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா

ராளமான பேர் படித்து விட்டு, அதற்குரிய வேலைகள் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அதற்கு என்ன பரிகாரங்கள்?

ஒரு மனிதன் படிக்கும்போது, பல கனவுகளுடன் இருப்பான். படித்து முடித்து விட்டு, நல்ல வேலைகளில் அமர்வோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பான். பெயர், புகழுடன் இருப்போம் என்று ஆசைப்படுவான். ஆனால், படித்த பிறகு அதற்குச் சிறிதும் தொடர்பே இல்லாத வேலையில், விருப்பமே இல்லாமல் பலரும் அமர்ந்திருப்பார்கள். அதற்குக் காரணம் என்ன?

Read more: உரிய வேலைகள் கிடைக்கவில்லையா? அதற்கான பரிகாரங்கள்

 

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel