ஏழாவது பூ
- Details
- Friday, 02 November 2012
- Category: சிறுகதைகள்
- Written by sura
- Hits: 7652

அது அவர்களின் முதல் இரவு. பாதி இரவு முடிகிற வரையில் அவன் அவளிடம் பல கதைகளையும் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு வகையான அனுபவங்களையும் அவன் கூறினான்.
சிறுவனாக இருந்தபோது ஒரு கன்றுக்குட்டியின் மேல் ஏறி தான் சவாரி செய்ய முயற்சித்த கதையைக் கூறிய போது, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.