தங்கம்மா
- Details
- Monday, 05 November 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 7806

புகை ஆகாயத்தை நோக்கி உயர்ந்து, காற்றில் சிதறிப் பறந்தது. மனித மாமிசம் கரிந்த வாசனை நான்கு பக்கங்களிலும் பரவியது. பாதையில் சென்றவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள்.
தங்கம்மா வேலியருகில் நின்று சுடுகாட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் நின்று கொண்டு நாணி உரத்த குரலில் அழைத்தாள்: