ஒளியைப் பரப்பும் இளம்பெண்
- Details
- Monday, 29 October 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 6452
காலையில் நீண்ட தூரம் பயணம் போய் விட்டு வரலாம் என்று வீட்டைவிட்டுப் புறப்பட்ட நான் போகும் வழியில் என் பழைய நண்பன் ஒருவனைப் பார்த்தேன். அவனும் நானும் நடந்து இரவின் மது போதையில் இருந்து இன்னும் மீண்டிராத ஒரு பாருக்கு முன்னால் நடந்தோம். பாதி திறந்திருக்கும் அதன் வாசல் கதவைப் பார்த்தவாறே நாங்கள் சிறிது நேரம் பாதையின் எதிர்ப்பக்கத்தில் இருந்த சாய்வு பெஞ்சில் உட்கார்ந்தோம். பறவைகள் ஆகாயத்தில் ஓசை எழுப்பியவாறு பறந்து போய்க்கொண்டிருந்தன. காற்று, “ஸ்ஸ்ஸ்...’ என்று பலமாக வீசி மரத்திலிருந்த இலைகளை வீழ்த்தியது. கீழே விழுந்த இலைகள் எங்களைச் சுற்றிலும் பரவிக்கிடந்தன. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாங்கள் பாதி அடைக்கப்பட்டிருக்கும் பாரின் கதவை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.