தண்ணீர்... தண்ணீர்...
- Details
- Friday, 02 November 2012
- Category: சிறுகதைகள்
- Written by sura
- Hits: 6513
சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கல்தூண் ஒன்றில் சாய்ந்தவாறு, தன்னைச் சுற்றிலும் ஒரு முறை அவள் தன் தளர்ந்து போன கண்களால் நோட்டம் விட்டாள். அவளுக்கு மிகவும் அருகில் கோவில் கோபுரம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. பல வகைப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படும் கடைகள் இருக்கும் இரு வீதிகளும் இங்கிருந்தே அவளின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன.