நீலாம்பரி
- Details
- Thursday, 14 June 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6802

முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு தான் இழந்த ஏதோவொன்றைத் தேடி மதுரைக்கு வந்திருந்தாள் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சுபத்ராதேவி. நீங்கள் எதை இழந்து விட்டீர்கள் என்று யாராவது அவளைப் பார்த்து கேள்வி கேட்டால் அந்தக் கேள்விக்குச் சரியான ஒரு பதில் சொல்ல சுபத்ராவால் முடியாது.