மழை நாளில் குடையானாய்!
- Details
- Monday, 09 July 2012
- Category: புதினம்
- Written by சித்ரலேகா
- Hits: 7316

முதல் இரவு. அர்ச்சனாவிற்கும், தியாகுவிற்கும் முதல் இரவு. பளபளவென்று பளிச்சிடும் நிறத்தில் முகம். 'தளதள’ என்று மின்னும் மினுமினுப்பான தேகம். கவிதை பேசும் கண்கள். தேனூறும் இதழ்கள். வெனிலா ஐஸ்க்ரீமைக் குழைத்துச் செய்தது போன்ற கன்னக்கதுப்புகள். நெற்றியில் விழுந்த சுருட்டையான முடிக்கற்றைகள், அவளது அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது. சங்குக் கழுத்தும், எடுப்பான மார்புகளும், சின்னஞ்சிறிய இடுப்பும் கொண்ட அர்ச்சனா, தகதகக்கும் பட்டுப் புடவையிலும், பொன் ஒளிவீசும் நகைகளிலும் கந்தர்வக் கன்னியாய் கவர்ந்திழுத்தாள்.