ஒரு ஒவியத்தின் கதை
- Details
- Wednesday, 07 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7327

"தந்தை மகளின் கழுத்தில் கத்தி வைப்பதும், குருதி பெருக்கெடுத்து வழிவதும்..." என்ற வரிதான் கவரை உடைத்து கடிதத்தை எடுத்தவுடன் கண்ணில்பட்டது. அப்போது அந்தக் கடிதம் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருக்கிற ஒரு இடத்திலிருந்து ஓவியரான என் நண்பர் அனுப்பியிருக்கும் கடிதம் என்று நினைக்கவில்லை. அடியில் எழுதப்பட்டிருந்த பெயரைப் பார்த்த பிறகுதான் நண்பர் எழுதிய கடிதம் என்பதே தெரியவந்தது.