பாம்பு வழிபாடு
- Details
- Thursday, 08 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7775

நான் பிறந்து வளர்ந்தது மூவாற்றுப்புழை நதிக் கரையில் இருக்கும் தலயோலப்பறம்பில்தான். வைக்கத்திற்கு அருகில் அது இருக்கிறது. மூவாற்றுப்புழை நதியில் வருடத்தில் இரண்டு முறை வெள்ளப் பெருக்கு உண்டாகும். கரைகளைக் கடந்து ஓடவும் செய்யும். ஒரு காலத்தில் நாங்கள் பெரிய படகுகளில்தான் வசித்ததே. அதாவது- பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு உண்டாகிற காலத்தில். அந்த மலையிலிருந்து வரும் நீரில் பலவும் மிதந்து வரும். யானை இறந்து மிதந்து வருவதையும் நான் பார்த்திருக்கிறேன். பிறகு... மரங்கள், பாம்புகள்... பாம்புகள் இறந் தவை அல்ல.