அழிந்து போகும் காலடிச் சுவடுகள்
- Details
- Wednesday, 23 May 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7292

கடற்கரையில் வெளிநாட்டு மனிதனின் காலடிச் சுவடுகள் விலகி விலகிப் போயிருப்பதை அவள் கவலையுடன் பார்த்தாள். அவள் அந்தக் காலடிச் சுவடுகளைப் பின் தொடர்ந்து சென்றாள். நிலவு உள்ள இரவு நேரமாக இருந்ததால் காலடிச் சுவடுகள் தெளிவாகத் தெரிந்தன. காற்று மெதுவாக வீசிக் கொண்டிருந்தது. இல்லாவிட்டால் காற்றில் பறக்கும் மணல் துகள்கள் காலடிச் சுவடுகளை அழித்துவிடுமே என்று அவள் நினைத்தாள்.