நமக்கு நல்லது காடுகள்
- Details
- Wednesday, 25 July 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 9872

வைசாகத்தில் நடுப் பகல் நேரம். சூரியன் ‘சுள்’ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெயில் பட்டு பூமி பயங்கரமாக சுட்டது. கிராமத்தைச் சுற்றியிருக்கும் காடுகள் மீது அலைந்து கொண்டிருந்த வெண் மேகங்கள் கரிய நிழல்களைப் படிய விட்டிருந்தன.
பூர்ணேந்து கிராமத்திலுள்ள தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் இப்போது கூட அவர்களுக்கு உண்டான அச்சத்திலிருந்து விடுபடவில்லை என்பதே உண்மை.