முள் மேல் மனசு
- Details
- Saturday, 08 September 2012
- Category: மர்ம கதைகள்
- Written by சித்ரலேகா
- Hits: 7859
“என்னங்க பிறந்த நாளுக்கு வைர நெக்லஸ் வாங்கி தரீங்களா?” மதனின் கழுத்தில் தன் கைகளை மாலையாய் போட்டபடி கேட்டாள் பத்மினி. சிவந்த நிறம் கொண்ட முகம். நீச்சலடிக்கும் மீன் போன்ற கண்கள். செழுமையான அங்கங்கள் அவளது இளமைக்கு மேலும் வனப்பைக் கூட்டி இருந்தது. அவளை இறுக அணைத்துக் கொண்டான் மதன். “பத்மினி, இப்பத்தான் இந்த புது பங்களா கட்டி இருக்கோம். நம்ப பிரிண்டிங் பிரஸ்ல எக்கச்சக்கமான ஆர்டர் வந்திருக்கிட்டிருக்கு. தினமும் எல்லா மிஷினும் ரெண்டு ஷிப்ட் ஓடுது. நல்ல டர்ன் ஓவர். நல்ல வருமானம்தான்.