மரணத்தின் நிழலில்...
- Details
- Thursday, 08 March 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6822

அன்புள்ள நண்பரே,
நினைத்துப் பார்க்கிறபோது நகைச் சுவையாகத்தான் இருக்கிறது. விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்போல் இருக்கிறது. அதேசமயம், அழவேண்டும் போலவும் இருக்கிறது. சில நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் கட்டாயம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் எழுத முடியவில்லை. எழுதாமலும் இருக்க முடியவில்லை. இரண்டு வித எண்ணங்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறேன் நான்.