பருந்துகள்
- Details
- Saturday, 10 March 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6800

அவள் முதல் தடவையாக அந்தப் பருந்தைப் பார்த்தபோது அது ஆகாயத்தில், கடலுக்கு மிகவும் மேலே அந்த அடர்த்தியான நீலத்தில் மெதுவாக வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய மனதிற்குள் கடுமையான ஒரு வெறுப்பு திடீரென்று வந்து நிறைந்தது. அதற்கான காரணங்களை அவள் தேடவில்லை. காரணங்களைத் தேடக்கூடிய ஒரு குணம் அவளிடம் இல்லாமலிருந்தது.