சாமக்கோழி
- Details
- Saturday, 27 October 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 7243

நான் ஒரு சாமக்கோழி. இரவு நேரத்தில் மொத்த சிறையும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, நான் என்னுடைய அறையில் விழித்துக் கொண்டிருப்பேன் - ஆந்தையைப் போல. ஆந்தை அல்லது சாமக்கோழி.
இந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். சாமக்கோழியான எனக்கு இங்கே தனி மரியாதை இருக்கிறது. நான் ஒரு மனிதனைக் கொலை செய்தவன். நான் மரண தண்டனை விதிக்கப்பட்டவன்.