ஒற்றையடிப் பாதைகள்
- Details
- Saturday, 10 November 2012
- Category: புதினம்
- Written by sura
- Hits: 6801

நம்பியாரின் மகள் வந்து நுழைந்ததே ஒரு சிறிய கோபத்துடன்தான்.
விமான நிலையத்தில் யாரையும் காணோம். பழக்கமான ஏதாவது முகம் இருக்கிறதா என்று தேடி இவ்வளவு நேரமும் வரவேற்பறையில் சுற்றித் திரிந்து பார்த்தாள். கடைசியில் ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து காத்து நின்றிருந்தாள். அங்கும் யாரையும் காணோம். பிறகு ஒரு சிறிய போராட்டத்திற்குப் பிறகு எப்படியோ டாக்ஸியை ஏற்பாடு செய்து பொருட்களை ஏற்றும்போது டயோட்டாவும், பெரிய ஒரு சிரிப்பும், தலைக்குப் பின்னால் சொறியலுமாக டிரைவர் அச்சுதன் நாயர் வந்து நின்று கொண்டிருந்தார்.