ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம்
- Details
- Thursday, 09 August 2012
- Category: வாழ்க்கை வரலாறு
- Written by சுரா
- Hits: 7205

சுராவின் முன்னுரை
1978- ஆம் ஆண்டு கேரளத்தில் ‘மலையாள நாடு’ என்ற பெயரில் அருமையான ஒரு வார இதழ் வந்து கொண்டிருந்தது. நான் அந்தப் பத்திரிகையின் நிரந்தர வாசகன். வி.பி.ஸி. நாயர் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். ஒவ்வொரு வாரமும் ‘மலையாள நாடு’ பத்திரிகையைப் படிப்பதென்றால் அப்படியொரு வெறி எனக்கு. அந்தக் காலகட்டத்தில் எம். முகுந்தன், காக்கநாடன் என்று பலரும் அதில் தொடர் கதைகள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.