யானைத் திருடன்
- Details
- Friday, 09 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 4884

யானையைக் கூடையில் வாரி எடுக்க முயற்சித்த ராமன் நாயரை எல்லாரும் "யானை வாரி’’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஒரு நாள் ராமன் நாயர் கூறுகிறார்:
“யானைத் திருடன் ராமன் நாயர் என்று அழைப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.”
அதற்குச் சரியான காரணமும் இருக்கிறது. ஆனால், அப்படி யாரும் அழைப்பதில்லை. போலீஸ் புத்தகங்களிலும் சிறை ஆதாரங்களிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது "யானை வாரி ராமன் நாயர்’’ என்றுதான். அவர் நன்கு தெரிந்து கொண்டே ஐம்பது ரூபாய் ஒப்பந்தத்தில் ஒரு யானையைத் திருடினார். அந்த துணிச்சலான சம்பவம் இப்படித்தான் நடந்தது: