குட்டிச்சாத்தானும் ரொட்டியும்
- Details
- Thursday, 24 May 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7260

ஒரு ஏழை விவசாயி ஒரு அதிகாலை நேரத்தில் உழுவதற்காக கிளம்பினான். போகும்போதே தன்னுடன் சாப்பிடுவதற்காக ஒரு ரொட்டியையும் எடுத்துச் சென்றான். உழுவதற்கான ஆயத்தங்களை அவன் செய்தான். ரொட்டியைத் தன் கோட்டிற்குள் சுருட்டி அதை ஒரு புதருக்குள் வைத்துவிட்டு, வேலை செய்ய ஆரம்பித்தான்.