நீலவானமும் சில நட்சத்திரங்களும்
- Details
- Monday, 18 June 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7292

ஜெயில் சூப்பிரெண்டு பிள்ளை தன் முன் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தையே வைத்தகண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து ஏதோ விஷக்காற்று தன்னை நோக்கி வீசுவது போலிருந்தது அவருக்கு. நெடுநேரம் அதையே பார்த்துக் கொண்டிருக்கவும் அவரால் முடியவில்லை. தலையைச் சற்று உயர்த்திப் பார்த்தார். அப்போதுதான் அவருடைய கண்கள் அங்கு வந்து நின்று கொண்டிருந்த ஜெயிலர் தாமஸை சந்தித்தன. கருத்துப்போய் அச்சம் தரக்கூடிய வகையான கோலத்துடன் நின்று கொண்டிருந்த தாமஸை நோக்கிக் கேட்டார் பிள்ளை.
“அவனை உள்ளே அடைச்சாச்சி, இல்லையா?”