என் உம்மா
- Details
- Tuesday, 09 October 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7758

நான் 24 மணி நேரமும் இந்த வீட்டில்தான் இருக்கிறேன். சில நேரங்களில் மருந்து வாங்குவதற்காக கோழிக்கோட்டிற்குச் செல்வேன். ஒன்றிரண்டு மணி நேரங்கள் கழித்து திரும்பி வருவேன். மாதத்தில் ஒரு நாள் திருச்சூருக்குச் செல்வேன். அங்கு போவது சாகித்ய அகாடெமி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் சாகித்ய அகாடெமியின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். ஒரு இரவு திருச்சூரில் தங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வருவேன். என்னைப் பார்க்க வீட்டிற்கு யாரும் வரவில்லையென்றால் மாலையில் வெளியே கிளம்புவேன்.