காதலின் நிழல்
- Details
- Monday, 24 September 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7569

மேற்கு திசையில் தெரிந்த மாலை நேரம் ஒரு விளக்கைப் போல ஜொலித்தது. வானத்தின் விளிம்பில் வர்ணங்கள் நதியைப் போல கலங்கியிருந்தன. அது அந்த இளைஞன் தன் பயணத்தைத் தொடங்கியபோது இருந்த நிலை. சிறிது நேரத்தில் நிறங்கள் முற்றிலுமாக மறைந்தன. மேகங்களில் இருட்டு நிறம் வந்து சேர்ந்தது. மாலை இரவு நேரத்திற்குள் சங்கமமானது.