மரணமற்ற மனிதன்
- Details
- Friday, 02 March 2012
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 5962
சேக்கெ என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், பரவலான அர்த்தத்தில் பார்க்கப்போனால், அது ஒரு கிராமம் அல்ல. வசதிக்காக காட்டுவாழ் மனிதர்களின் அந்தக் குடியிருப்புப் பகுதியை கிராமம் என்று கூறிக் கொள்வார்கள். அந்த காட்டுவாழ் மனிதர்களும் கிராமம் என்ற பெயரை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், கிராமத்தின் தலைவரை நாகரீகமான முறையில் அவர்கள் காம்படா என்று அழைத்தார்கள்.