செகண்ட் ஹேண்ட்
- Details
- Friday, 09 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7869

முடியை அவிழ்த்துப்போட்டு, கண்கள் சிவக்க சாரதா பயங்கர கோபத்துடன் நின்று கொண்டிருக்கும் கோலத்தைப் பார்த்த பத்திரிகை முதலாளி கோபிநாதன் தாழ்ந்த குரலில் சொன்னார்:
"சாரதா... நாளைக்குப் பத்திரிகை வெளிவர்ற நாள்னு உனக்குத் தெரியாதா? இன்னைக்கு ராத்திரி எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு. சாப்பாடு ஏதாவது இருந்தா கொடு...''
"சாப்பாடு...'' சாரதா கோபத்தில் அலறினாள். "நான் ஒண்ணுமே தயாரிக்கல. புரியுதா? வேணும்னா என்னையே சாப்பிட்டுருங்க. எனக்கு இந்த வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!''