க்ரயோஜனிக் எஞ்சின்
- Details
- Monday, 12 March 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7682

ஐ.எஸ்.ஆர்.ஓ திருட்டு வழக்கில் உங்கள் யாருக்குமே தெரியாத ஒரு மனிதன் சிறைக்குப் போயிருக்கிறான். அந்த ஆளின் கதைதான் இது. அந்த மனிதனின் பெயர் குட்டிகிருஷ்ணன். நம்பி நாராயணனையும், மரியம் ரஷீதையும், மற்றவர்களையும் காறித் துப்பவும், திட்டவும், முறைத்துப் பார்க்கவும் நீங்கள்கூட நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு சாந்தி... ஓம் சாந்தி... சாந்தி! உங்களுக்கு இப்பொழுது பைத்தியம் எதுவுமில்லை அல்லவா? நமக்குள் பிசாசு ஓடிக்கொண்டிருந்த அந்த நாட்களில்தான் திருவனந்தபுரத்துக்காரனான குட்டிகிருஷ்ணன் என்ற நாவிதன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.