மாத்தனின் கதை
- Details
- Thursday, 26 April 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7273

“அம்மா, அப்பா இன்னைக்கும் வர மாட்டாரா?”
பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதற்கு மத்தியில் திரேஸ்யா தன் தாயைப் பார்த்துக் கேட்டாள்.
பிரார்த்தனைக்கு மத்தியிலும் படகுத் துறையில் நீர் மோதும் சத்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தாள் மரியா. அவள் சொன்னாள்: “வருவாரு மகளே! இன்னைக்கு எப்படியாவது வருவாரு.”