கடல்
- Details
- Monday, 24 September 2012
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7212

ஒரு நாள் நானும் என் மனைவியும் சேர்ந்து - அது என்ன தேதி என்பது சரியாக ஞாபகத்தில் இல்லை. போன மாதத்தில் என்பதை மட்டும் சொல்ல முடியும். நாங்கள் ஒரு நாள் மாலை நேரத்தில் கடற்கரையில் உட்கார்ந்திருந்தோம். எங்களுக்குள் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். சொல்லப் போனால் நாங்கள் உட்கார்ந்திருந்தோம் என்று கூறுவது கூடத் தப்பு. ஒரு கல்லின் மேல் சாய்ந்து நின்றிருந்தோம் என்று சொல்வதே பொருத்தமானது. கடல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தன் ஆக்கிரமிப்பை நீட்டிவிடக்கூடாது என்பதற்காக கொண்டு வந்து போடப்பட்ட கல் அது.